இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 2 முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் விருதுகள் வழங்கப்படுகின்றன. போலீஸாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காவல்துறை, தீயணைப்பு படை, ஊர்க்காவல் படை உள்ளிட்ட சீர்திருத்த சேவைகளில் சிறப்பாக பணியாற்றிய 1307 பேர் குடியரசுத் தலைவரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிறப்பு மிக்க சேவையாற்றியதற்காக உத்தரபிரதேசத்தை சேர்ந்த 91 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வீர தீர செயலுக்கான விருது தெலங்கானாவை சேர்ந்த தலைமைக் காவலர் சதுவு எடையாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 213 வீர பதக்கங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் 52 பதக்கங்கள் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 26 பேர் இந்த முறை குடியரசு தலைவரின் வீர தீர செயலுக்கான விருதை பெற உள்ளனர். வன்னிய பெருமாள், அபின் தினேஷ் மோடாக்கிற்கு சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது. மத்திய உள்துறைக்கான சிறப்பு விருது தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பெனி கமாண்டர் மூர்த்தி, பிளாட்டூர் கமாண்டர் 3 கலையழகன், ஏரியா கமாண்டர் பிளாட்பினுக்கு திறம்பட சேவையாற்றியதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேருக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதில், ஐஜி கண்ணன், ஐஜி பாபு, ஆணையர் பிரவீன்குமார் அபினபு, எஸ்பி ஃபெரோஸ்கான்,எஸ்.பி.க்கள் சுரேஷ்குமார், கிங்ஸ்லின், ஷியாமளா தேவி, பிரபாகர், பாலாஜி சரவணன், ஏஎஸ்பிக்கள் ராதாகிருஷ்ணன், ஸ்டீபன், டிஎஸ்பிக்கள் டில்லி பாபு , மனோகரன், ஆய்வாளர்கள் சந்திரசேகர், சந்திரமோஜன், ஹரிபாபு, தமிழ்ச்செல்வி மற்றும் 3 எஸ்ஐக்கள் உள்ளிட்டோருக்கு அதிகாரபூர்வமாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுகள் தமிழகத்தை சேர்ந்த டி.ஜி.பி வன்னிய பெருமாள் மற்றும் ஏ.டி.ஜி.பி அபின் தினேஷ் மோடாக் ஆகிய இரண்டு காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இவர்கள் அனைவருக்கும் டெல்லி செங்கோட்டையில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“