செப். மாதம் புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடி: கடல்பாசி, மீன்வளர்ப்பு திட்டங்களில் புதிய திருப்பம்
இன்னும் சில வாரங்களில், இப்பயிற்சிகள் வழங்கப்படும். கடல்பாசி வளர்ப்பு 45 நாட்களில் அறுவடைக்கு தயாராகும், கூண்டு மீன் வளர்ப்பு 9 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இன்னும் சில வாரங்களில், இப்பயிற்சிகள் வழங்கப்படும். கடல்பாசி வளர்ப்பு 45 நாட்களில் அறுவடைக்கு தயாராகும், கூண்டு மீன் வளர்ப்பு 9 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதாக துணைநிலை ஆளுநர் அவர்கள் இன்று அறிவித்தார். இந்த வருகை, புதுச்சேரியின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு ஒரு முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது.
Advertisment
கடந்த மாதம், புதுச்சேரி அரசு மற்றும் மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கூண்டு மீன் வளர்ப்பு மற்றும் கடல்பாசி வளர்ப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன், முதலமைச்சர் ந. ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தற்போது, பூர்வாங்க ஆய்வுப் பணிகள் புதுக்குப்பம் மற்றும் பிற பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன. முதன்மை விஞ்ஞானி டாக்டர் சார்லஸ் ஜீவா மற்றும் முதுநிலை விஞ்ஞானி டாக்டர் ஜான்சன் ஆகியோர் துணைநிலை ஆளுநரை சந்தித்து, ஆய்வுப் பணிகள் குறித்து விளக்கினர்.
Puducherry
Advertisment
Advertisements
கடல்பாசி வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. இன்னும் சில வாரங்களில், இப்பயிற்சிகள் வழங்கப்படும். கடல்பாசி வளர்ப்பு 45 நாட்களில் அறுவடைக்கு தயாராகும், கூண்டு மீன் வளர்ப்பு 9 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
துணைநிலை ஆளுநர், பிரதமர் மோடியின் செப்டம்பர் மாத வருகையின் போது, கடல்பாசி அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.