பொள்ளாச்சி அருகே சரக்கு வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து; 2 பேர் பலி
பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்து சரக்கு வாகனம் டாடா ஏஸ் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து கால்வதுறையினர் விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் கோபாலபுரத்தில் இருந்து தனியார் பேருந்தில் கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்களை ஏற்றிகொண்டு பொன்னாயூர் பகுதி தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, பொள்ளாச்சியில் இருந்து வந்துகொண்டிருந்த சரக்கு வாகனம் டாடா ஏஸ் வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
Advertisment
டாட ஏஸ் சரக்கு வாகனம் அப்பளம் போல நொறுங்கியது. தனியார் பேருந்து நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் நடராஜ் மற்றும் பேருந்தில் இருந்த கிட்டுசாமி சம்பவ இடத்திலேயே இரண்டு பேருமே பலியானார்கள். இந்த விபத்தில், தனியார் பேருந்தில் பயணம் செய்த 15 க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பேருந்து - சரக்கு வாகனம் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"