/indian-express-tamil/media/media_files/g1no8Y2FvIhEP2MzvD6c.jpg)
புறநானூறு பாடலைத் தவறாக எழுதிய 12-ம் வகுப்பு மாணவனைக் கண்டபடி அடித்த தமிழாசிரியrர் கைது
பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் புறநானூறு பாடலைத் தவறாக எழுதிய 12-ம் வகுப்பு மாணவனைக் கண்டபடி அடித்த தமிழாசிரியரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 3-ம் தேதி பள்ளியில் பணியாற்றி வரும் தமிழ் ஆசிரியர் சுரேஷ்குமார் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார். அப்போது, அவர் மாணவர்களிடம் புறநானூறு செய்யுளை எழுதுமாறு கூறியுள்ளார்.
அப்போது, அந்த வகுப்பில் உள்ள 17 வயதான மாணவன் ஒருவர் புறநானூறு செய்யுளைத் தவறாக மாற்றி எழுதியதாக தெரிகிறது. இதனால், கோபமடைந்த தமிழ் ஆசிரியர் சுரேஷ்குமார் அந்த 17 வயது மாணவனை கன்னத்தில் அறைந்தும், வயிற்றுப் பகுதியில் குத்தியும், தேர்வு எழுதும் அட்டையால் முதுகில் அடித்ததாக தெரிகிறது. இதனால், வலி தாங்க முடியாத அந்த மாணவன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று சென்றுள்ளார்.
இதுக்குறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் பாதிக்கபட்ட மாணவன் அளித்த புகாரின் பேரில் 17 வயது மாணவனை அடித்த தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.