பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் நடைப் பயணத்தை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அமலாக்கத் துறை (இ.டி) விட்டு வைக்காது. தமிழகத்தின் மணல் கடத்தல் தலைநகராக வேலூர் மாவட்டம் விளங்குகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கிட்டதட்ட இ.டி விசாரணையின் 7 சம்மன்களுக்கு ஆஜராகவில்லை. டெல்லி குழு அவரிடம் விசாரிக்க சென்றபோது அவர் அங்கு இல்லை. அவருக்கு இது தெரியும். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தொகுதி எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய வற்புறுத்தியபோது அவர் உறுதியாக இருந்தார். இப்போது. அந்தத் தொகுதியில் ஹேமந்த் சோரனும் அவரது மனைவியும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.ஹேமந்த் சோரனை 5 நாள் நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“