/tamil-ie/media/media_files/uploads/2023/02/Express-Image-1-2.jpg)
சென்னையில் மாறுவேடத்தில் வந்து தனது மனைவியின் முகத்தில் பிளேடால் அறுத்த, கல்லூரி பேராசிரியரை காவல்துறை கைது செய்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த குமாரசாமி என்பவர், நந்தனம் அரசு கல்லூரியில் வரலாற்று பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தன்னிடம் டுய்ட்சன் படிக்க வந்த மாணவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் தனது மனைவிமீது சந்தேகம் கொண்ட குமாரசாமி, வீட்டில் அவரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது தந்தை இறந்ததால் சென்னை வந்துள்ள அவரது மனைவி ஜெயவாணி, சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நபர் ப்ளேடால் அறுத்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தபின், சி.சி.டி.வி.,யில் காட்சிகளை ஆய்வு செய்தனர் காவல்துறை. அதன்பிறகு, ஜெயவாணியின் கணவர் குமாரசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, தலையில் விக் வைத்து மாறுவேடத்தில் வந்து, தனது மனைவியை பிளேடால் அறுத்ததை, குமாரசாமி ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து காவல்துறை அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.