Advertisment

ரூ.10.37 கோடி சொத்து வரி பாக்கி: மத்திய அரசு அலுவலகத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

ரூ.10.37 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ள மத்திய அரசு அலுவலகத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Property tax Chennai Corporation sent notices to central govt offices Tamil News

சொத்து வரி தொடர்பாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாநகராட்சி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Greater Chennai Corporation | Central Government: சொத்து வரியை நிலுவையில் வைத்துள்ள கட்டடங்கள் மீது, சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வகையில், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்ட் சொத்து வரியை நிலுவையில் வைத்துள்ளது. இது குறித்து பல முறை தகவல் தெரிவித்தும் இன்னும் அந்த தொகை செலுத்தப்படவில்லை. 

Advertisment

இந்நிலையில், நிலுவையில் உள்ள ரூ.10.37 கோடி சொத்து வரியை செலுத்தவில்லை என்பதால், மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்டுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நிலுவையில் உள்ள தொகை செலுத்தவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதேபோல் சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Greater Chennai Corporation Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment