Advertisment

ஆந்திரா சுங்கச்சாவடியில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

ஆந்திரா சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வாணியம்பாடி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
ஆந்திரா சுங்கச்சாவடியில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

வடமலை சுங்கச்சாவடியில் நடந்த தாக்குதல்

ஆந்திரா சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வாணியம்பாடி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிகழ்ந்துள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள வடமலை சுங்கச்சாவடியில் தமிழகத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நான் தமிழர் கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

publive-image

அப்பொழுது திடீரென சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாகனத்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை தடுக்க சென்ற போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சுங்கச்சாவடியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்ததால், அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Ntk Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment