Advertisment

சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி: போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த போலீசார்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி வந்த நிலையில், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
Protesters arrested in Salem for showing black flag against TN Governor RN Ravi Tamil News

சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

salem | periyar-university: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக  ஆளுநர் ஆ.என்.ரவி வந்தார். அவரை துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுடன்  ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடவுள்ளார்.

Advertisment

இதனிடையே,  ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் மற்றும் தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் மற்றும்அரசியல் கட்சியினரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். மேலும் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு சேலம் மாநகர காவல்துறை சார்பில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Periyar University Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment