/indian-express-tamil/media/media_files/x2UhyQEdDzyYr2JtQhbl.jpg)
பிரதமர் மோடி - பி.டி.ஆர் சந்திப்பு குறித்து தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகாத நிலையில், இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியது.
Ptrp Thiyagarajan | Pm Modi | Madurai:தமிழ்நாட்டிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கடந்த 27-ம் தேதி வந்தார். திருப்பூர் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு மதுரை வழியாக தூத்துக்குடி சென்ற அவர், மதுரை பசுமலையில் பிரதமர் தங்கியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி மதுரையில் தங்கியிருந்தபோது, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் - பிரதமர் மோடி சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகியது. மேலும், பிரதமரை தனியாக சந்தித்து 10 முதல் 15 நிமிடங்கள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகவும் செய்திகள் வெளிவந்தன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "பிரதமர் மோடிக்கும் எனக்கும் தனி உறவு உள்ளது போல் போலி செய்தியை பரப்புகின்றனர். முதலமைச்சர் வழங்கிய அரசாங்க பணியைதான் நான் செய்தேன். அரசாங்க பணியின் காரணமாகவே பிரதமரை சந்தித்தேன். தனிப்பட்ட விருப்பத்திற்காக அல்ல" என்று கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.