/indian-express-tamil/media/media_files/YhxP4UhVMAnN9kxZL9xf.png)
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் பதவியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாயார் நியமிக்கப்பட்டுள்ளார்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் உள்பட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர்களில் ஒருவராக துரை சொக்கிகுளம் வல்லபாய் ரோடு சுப்பராயன் என்பவரின் மகள் ருக்மணி பழனிவேல்ராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவர் அமைச்சர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ஆவார். மேலும் குழுவில் , மதுரை அரசரடி ஹார்விநகர் 4வது தெருவைச் சேர்ந்த எம்.சேகர் என்பவரின் மகள் எஸ்.மீனா, மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை கே.கே.நகர் ஏரிக்கரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மு.சீனிவாசன், மதுரை காந்தி நகர் சூமேக்கர் தெருவைச் சேர்ந்த சி.கிருஷ்ணன் மகள் டி.சுப்புலெட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தக்காராக பணிபுரிந்த கண்ணன் கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதையடுத்து புதிய தக்காராக க.செல்லத்துரை என்பவர் நியமனம் செய்யப்பட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.