அசுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக புகார்; ஊராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டம், தொரவி ஊராட்சி நிர்வாகம் மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். குறிப்பாக, குழாய் உடைக்கப்பட்டு அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், தொரவி ஊராட்சி நிர்வாகம் மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். குறிப்பாக, குழாய் உடைக்கப்பட்டு அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

author-image
WebDesk
New Update
Water issue

விழுப்புரத்தில், காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் அசுத்தமாக வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம், தொரவி கிராமத்தின் ஆற்றில் இருந்து காலனி பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களான பின்பும், சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து அழுக்கு நிறைந்த குடிநீர் தான் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது. இது குறித்து கிராம செயலாளர்,  ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு தகவல் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குழாயை சீரமைத்து சுத்தமான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Water

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: