மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு : அ.தி.மு.க. சார்பில் சிபிஐ இயக்குனருக்கு கடிதம்

மருத்துவ கல்லூரி இடங்களை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பெற்றுத்தருவதில் ஊழல், முறைகேடுகள் நடக்கிறது.

மருத்துவ கல்லூரி இடங்களை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பெற்றுத்தருவதில் ஊழல், முறைகேடுகள் நடக்கிறது.

author-image
WebDesk
New Update
medical students

மருத்துவ மாணவ சேர்க்கையில் முறைகேடு இருப்பதாக புதுவை அ.தி.மு.க குற்றச்சாட்டு

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisment

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ இயக்குனருக்கு புதுச்சேரி அதிமுக மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்*

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் டெல்லி சி.பி.ஐ. இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

புதுவையில் மருத்துவக்கல்லூரி இடங்களை பெறுவதில் பெரிய மோசடிகளும், முறைகேடுகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஆட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள வர்களும், அவர்களுக்கு கைக்கூலியாக செயல்படும் சில அரசியல்வாதிகளும், சென்டாக் கலந்தாய்வு நடத்தும் அதிகாரிகளும் இணைந்து மருத்துவ கல்லூரி இடங்களை முறைகேடாக அபகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

மருத்துவ கல்லூரி இடங்களை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பெற்றுத்தருவதில் ஊழல், முறைகேடுகள் நடக்கிறது. சட்ட விதிகளின்படி புதுவை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்கள் சிலரின் சுயலாப நோக்கால் தட்டிப்பறிக்கப்படுகிறது. எனவே புதுவையில் நடைபெறும் இந்த மாபெரும் ஊழல், முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: