புதுச்சேரி காமாட்சியம்மன் கோயில் நில அபகரிப்பு- இரு பா.ஜ,க. எம்.எல்.ஏ.க்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

கோயில் நில அபகரிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் ஆனால், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட எவரையும் விட்டுவிடப் போவதில்லை என புதுச்சேரி அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

கோயில் நில அபகரிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் ஆனால், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட எவரையும் விட்டுவிடப் போவதில்லை என புதுச்சேரி அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Chennai high court

Puducherry Kamatchi Amman temple land case- Madras high court directed two BJP MLAs to return lands

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதாக கூறி, இது சம்பந்தமான விற்பனை பத்திரத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், கோயில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது.

Advertisment

இந்த நில அபகரிப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் விவிலியன் ரிச்சர்டு ஜான்குமார் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது.  

அப்போது இரு எம்.எல்.ஏக்கள் தரப்பில், தாங்கள் அப்பாவிகள் என்றும் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்ட சொத்து கோயிலுக்கு சொந்தமானது என்று நிரூபித்தால் கோயில் நிர்வாகத்திடம் தாங்கள் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

கோயில் நில அபகரிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் ஆனால், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட எவரையும் விட்டுவிடப் போவதில்லை என புதுச்சேரி அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, கோயில் சொத்து தனியாருக்கு விற்கப்படுவதில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சிபிசிஐடி விசாரணை நடத்தவும், ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்

மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள் தவறு செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. பொது சொத்தான கோயில் சொத்தை பாதுகாக்க வேண்டியது சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை என்பதினால் உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிபதி, வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: