Advertisment

புதுச்சேரியில் பார்சல் சர்வீஸ் மூலம் போதை பொருள் விநியோகம் : தனியார் குடோனில் தீவிர சோதனை

புதுச்சேரியில் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்காக ஆபரேஷன் திரிசூல் என்ற அமைப்பை தொடங்கி, புதுச்சேரி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Puducherry Kanja

காவல்துறை சோதனை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரியில் பார்சல் சர்வீஸ் மூலம் போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தனியார் பார்சல் குடோனில் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Advertisment

புதுச்சேரியில் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்காக ஆபரேஷன் திரிசூல் என்ற அமைப்பை தொடங்கி, புதுச்சேரி போலீசார் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் மற்றும் பல்வேறு கடைகளில் அவ்வப்போது சோதனைகளை  மேற்கொண்டு கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள பார்சல் நிறுவனத்தின் மூலம் புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதனையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார்,மோப்பநாய் பைரவா உதவியுடன் 100 அடி சாலையில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பார்சல்களையும், டெலிவரி செய்ய வைக்கப்பட்டிருந்த பார்சல்களையும் ஒவ்வொன்றாக சோதனை மேற்கொண்டனர். மேலும் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் வந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ஊழியர்களிடம்  அறிவுறுத்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment