/indian-express-tamil/media/media_files/2024/11/13/zrPDNfWYqz2BCAHC6iql.jpg)
புதுவை மழை.. முக்கிய அறிவிப்பு
புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் 122 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் கட்டுப்பாட்டு அறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக
புதுச்சேரியில் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்
என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி நேற்று முதல் இப்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோ தங்கன் தொடர்
மழையினால் பாதிப்பு ஏதேனும் நேர்ந்துள்ளதா என்று வெவ்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்
நிவாரண முகாம்கள், துறைவாரியான கட்டுப்பாட்டு மையங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள், எச்சரிப்புக் கருவிகள், மீட்பு உபகரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வருவாய் துறையில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால உதவி குழுக்கள், மீனவர்களுக்கு மீன்வளத்துறை மூலமாக கொடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கைகள் மற்றும் தீயணைப்பு துறையின் தயார் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
மேற்படி தொடர் மழையை எதிர்கொள்ள அவசரகால செயல் மையத்தின் கட்டுப்பாட்டு அறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை
தெரிவிக்கலாம் என கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.