Advertisment

பீடி தராததால் ஏற்பட்ட வாக்குவாதம்: புதுச்சேரி ரிக்ஷா தொழிலாளி கொலையில் திருப்பம்

புதுச்சேரியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த ரிக்ஷா தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவா் பீடிக்காக கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

author-image
WebDesk
New Update
விஷவாயு தாக்கி 4 துப்புரவு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

Puducherry Rickshaw driver killed

புதுச்சேரியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த ரிக்ஷா தொழிலாளி மர்மமாக இறந்து கிடந்த வழக்கில், அவா் பீடிக்காக கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

Advertisment

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்தவா் முருகன் (70). ரிக்ஷா தொழிலாளி. மனைவியைப் பிரிந்து தனியாக வசித்த முருகன், இரவில் ஆம்பூா் சாலை நடைமேடையில் தூங்குவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி காலை முருகன் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்து பெரியகடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனா். போலீசார் நடத்திய விசாரணையில், புதுச்சேரி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சித்தானந்தம் (45) என்பவா் முருகனை கொன்றது தெரியவந்தது.

தொடா்ந்து, போலீசார் சித்தானந்தத்தை  கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, முருகனிடம் கடந்த 3-ஆம் தேதி நள்ளிரவு பீடி கேட்டதாகவும், இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், முருகனை கொன்றதாகவும் சித்தானந்தம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment