மகளிர் இட ஒதுக்கீட்டால் புதுச்சேரி மாநிலத்தில் 11 பெண்கள் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு உள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட ஆலச்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியை பார்வையிட்ட தமிழிசை சவுந்தரராஜன், மாணவர்களோடு கலந்துரையாடினார். மேலும் மாணவர்களுக்கு மதிய உணவினையும் பரிமாறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவெடுத்துள்ளார். இது பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும். இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்போது, புதுவை மாநிலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்களும், தமிழகத்தில் 77 பெண் எம்.எல்.ஏ.க்களும், 13 பெண் எம்.பி.க்களும் இருப்பார்கள்.
அரசு மருத்துவமனைகளும், அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்கு பலன் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய அடிப்படையான ஆசை என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“