Advertisment

மு.க. ஸ்டாலின், உதயநிதி குறித்து அவதூறு: புதுக்கோட்டை பாஜக பிரமுகர் சிறையில் அடைப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டதாக புதுக்கோட்டை பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News

புதுக்கோட்டை பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலக் கண்ணன். இவர் பாரதிய ஜனதா கட்சியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் மாவட்ட செயலாளராக இருந்துவருகிறார்.

Advertisment

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக கருத்துகள் பதிவிட்டதாக திமுக நிர்வாகி புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் நாகுடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, கமலக்கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாஜக நிர்வாகியின் கைதுக்கு அக்கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலக்கண்ணன் ஐ.டி. விங்கில் தீவிரமாக பணியாற்றியவர் எனக் கூறப்படுகிறது. இவர், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து அவதூறாக பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Udhayanidhi Stalin Stalin Pudukkottai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment