வேங்கைவயல் சம்பவம்: 10 பேரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை

இவ்வழக்கில், இதுவரை சுமார் 4 சிறுவர்கள் உட்பட 31 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில், இதுவரை சுமார் 4 சிறுவர்கள் உட்பட 31 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Vengaivayal

Vengaivayal

வேங்கைவயல் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், சந்தேகத்துக்குரியோரிடம் உண்மை அறியும் பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனா்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர் தொட்டியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து நேரடி சாட்சி யாரும் இல்லாததால், டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பூர்வமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இவ்வழக்கில், இதுவரை சுமார் 4 சிறுவர்கள் உட்பட 31 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் காவலர் ஒருவருக்கு குரல் மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து 10 மாதங்களாகி விட்ட நிலையில் இதுவரை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

Advertisment
Advertisements

இந்நிலையில் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக, டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்ட 31 பேரில், 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பிது.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அந்த 10 பேரும் இன்று காலை ஆஜராகினர்.

இந்த வழக்கு மீதான விசாரணை காலை நடைபெறுவதாக இருந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: