/indian-express-tamil/media/media_files/2025/06/04/RWa1EsBNbLc7o0vzxIdO.jpg)
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அ.தி.மு.க., இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி புகழேந்தி தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழங்கப்பட்ட புகார் மனுக்கள் மீது கடந்த 14 மாதங்களாக தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதனால், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில், இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது கடந்த வாரம் அளித்த மனு மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் கால தாமதம் ஏற்படுத்தி வருகிறது என்று புகழேந்தி தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மனுவை அவசரம் கருதி உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி புகழேந்தி தனது மனுவில் கோரியுள்ளார்.
மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார். இ.பி.எஸ் அறிவித்த வேட்பாளர்களை அ.தி.மு.க வேட்பாளர்களாக அறிவிக்கக் கூடாது என கோரிக்கை மனு அளித்திருந்த புகழேந்தி, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி சார்பில் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.