நீட் தேர்வில் பீர், ரம், பிராந்தி, விஸ்கி குறித்த கேள்வி: கல்வியாளர்கள் அதிர்ச்சி

நீட் நுழைவுத் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்த மாணவர்கள் விடையளிக்கும் வகையில் வினா இடம் பெற்றது கல்வியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்த மாணவர்கள் விடையளிக்கும் வகையில் வினா இடம் பெற்றது கல்வியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
neet-exam-academics-shocked

நீட் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்த கேள்வி - கல்வியாளர்கள் அதிர்ச்சி

2025-26-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' தேர்வை எழுத நாடு முழுவதும் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் என மொத்தம் 22 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுக்காக 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்கள் இந்தியாவிலும், 13 வெளிநாடுகளில் உள்ள நகரங்களிலும் அமைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சுமார் 1.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 44 தேர்வு மையங்களில் 21 ஆயிரத்து 960 பேர் எழுத விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

Advertisment

அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நேற்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தது. தேர்வு மையத்துக்குள் காலை 11.30 மணியில் இருந்து தேர்வர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 1.30 மணி வரை உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர், தேர்வு மையம் மூடப்பட்டு, தேர்வர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்த மாணவ-மாணவிகளிடம் 'நீட்' தேர்வுக்கே உரித்தான கடும் கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.குறிப்பாக மாணவிகள் தலைவிரிக்கோல காட்சி இந்தாண்டும் வழக்கம்போல அரங்கேறின. பெரும்பாலான மாணவிகள் சாதாரண உடைகளையே அணிந்து வந்திருந்தனர்.

இந்த நிலையில் 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறான வினாவிற்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். இந்த தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

இந்த நிலையில் வினாத்தாளில் 117-வது கேள்வியாக ஈஸ்ட்டால் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம் எது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் பீர், ரம், பிராந்தி, விஸ்கி ஆகியவை ஆகும். இந்த 4 விடைகளில் சரியானதை தேர்வு செய்து எழுத வேண்டும். இந்த கேள்விக்கு விடை பீர் என்பதாகும். இதை சரியாக எழுதியிருந்தால் 4 மதிப்பெண்கள் கிடைக்கும்.

இந்த கேள்விக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்க எத்தனையோ இருக்கும் நிலையில் மதுபானம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.  வருங்கால மருத்துவர்களிடம் இவ்வாறான கேள்வி தேவையில்லாதது. வினாக்கள் சமுதாய நோக்கத்தோடு இருக்க வேண்டும். ஏற்கனவே இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவது அதிகரித்து வரும் நிலையில் 'நீட்' போன்ற உயரிய தேர்வில் இதுபோன்ற வினாவை தவிர்த்திருக்கலாம் என்றனர்.

NEET Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: