தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 2 நாள் பயணமாக இன்று மாலை கிளம்பி டெல்லி செல்கிறார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல போராட்டங்களை நடத்தினார். மேலும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் தற்போது தமிழக ஆளுநர் ஆர். என் . ரவி டெல்லி செல்ல உள்ளார்.
இந்நிலையில் இந்த பயணத்தின்போது, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக ஆளுநர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதாகவும் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக உரையாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை அவர் டெல்லி புறப்படுகிறார்.