இலங்கை திவாலான நேரத்தில் மோடி அவர்களுக்கு பணம் கொடுத்து உதவினார், அப்போது கச்சத்தீவை மீட்டிருக்கலாமே “ என்று தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தபோது, ” கேட்கிற நிதியை தமிழகத்திற்கு கொடுப்பதற்கு மனம் இல்லாத மோடி, மக்களின் கவனத்தை திசை திருப்ப இப்படி ஒரு நாடகத்தை மேற்கொண்டுள்ளார். ஏதோ கச்சத்தீவை நேற்று கொடுத்துவிட்ட மாதிரியும், இன்றைக்கு அதைபற்றி பேசுகிறார். 1994ல் தி.மு.க ஆட்சியில் இருந்த காலத்தில், கலைஞர் சட்டமன்றத்தில் கச்சத்தீவை கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் போடப்பட்டது.
தி.மு.க சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டங்களில் பேசியவர்களில் நானும் ஒருவன். அந்த வரலாறு எல்லாம் இவர்களுக்கு தெரியவில்லை. 50 வருடம் ஆகிவிட்டது என்ன சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்பதாலும் தோல்வி பயத்தில், கலர் கலராக பொய் சொல்கிறார்கள்.
10 ஆண்டுகள் ஆட்சியில் மோடி இருந்தார்தானே. இலங்கை திவாலாகி, பிச்சைக்காரர்களாகிவிட்டது. அப்படிபட்ட இலங்கைக்கு பிச்சை போட்டவர்தான் மோடி. அப்போது கச்சத்தீவை எழுதி வாங்கி இருக்கலாமே. இன்றைக்கு இலங்கையில் அதானி நிறுவனத்திற்கு மின்சார வாரியத்தில் இருந்து ஒப்பந்தம் வருகிறது. இதை மோடி வாங்கி கொடுத்தாரா ? இல்லையா ? என்பதை அவர் சொல்ல வேண்டும். இதற்கு நேரம் கிடைக்கும்போது, கச்சத்தீவை மீட்டிருக்கலாமே. அவர் எல்லாவற்றையும் மீறுகிறார். நேற்று நடந்திருக்கும் மிகப் பெரிய ஐயோக்கியத்தனம். அத்வானிக்கு பாரத ரத்னா விருது முன்பே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வீடு தேடி சென்று வழங்கப்பட்டது. அப்போது குடியற்சுத் தலைவர் உட்கார இருக்கை கூட இல்லை. வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண் போல அவரை நடத்தி உள்ளனர்’ என்று அவர் கூறீனார்.