/tamil-ie/media/media_files/uploads/2021/11/chennai-rain.jpg)
சென்னையில் ஒரே இரவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து வானிலை ரேடார் கோளாறு பிரச்னை வெளியே தெரிய வந்துள்ளது. எச்சரிக்கை விடுக்கப்படாததால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இதற்கு நம்பகமான டாப்ளர் வானிலை ரேடார் இல்லாததே முக்கிய காரணம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 10-11 தேதிகளில் கனமழை பெய்யும் என்று பெரும்பாலான வானிலை மாதிரிகள் கணித்திருப்பதால், சென்னையில் வெள்ளப் பிரச்சனை மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இந்த வார இறுதியில் வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
ஆனால், சென்னையில் சனிக்கிழமை இரவு பெய்த மழைக்கு முன்னதாக மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று மாநில அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். உண்மையில், நவம்பர் 9ம் தேதி வரை சென்னைக்கு பச்சை கோட் (எச்சரிக்கை விடுக்கப்படாததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை) எச்சரிக்கை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நம்பகமான டாப்ளர் வானிலை ரேடார் இல்லாததே முக்கிய காரணம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜியில் (என்ஐஓடி) ரேடார் இன்னும் அளவுத்திருத்தம் மற்றும் சோதனையில் உள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறுகளால் சென்னையின் ரேடார் செயலிழந்துள்ளது. பருவமழைக்கு முன்பே இது குறித்து ஐ.எம்.டி-யிடம் தமிழ்நாடு அரசு கவலை தெரிவித்திருந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.