பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ரஃபேல் வாட்ச் கட்டியிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருந்தது. அதைக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் தி.மு.க-வினர் அந்த ரஃபேல் வாட்ச் 5 லட்சம் ரூபாய் என்றும் 4 ஆடுகள் மட்டுமே வைத்திருக்கும் அண்ணாமலை எப்படி இவ்வளவு விலை உயர்ந்த வாட்ச் வாங்கினார் என்று கேள்வியெழுப்பினர்.
இந்த வாட்ச் குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ரபேல் நிறுவனத்துடன் இணைந்து கடிகார தயாரிப்புக்கு பெயர்போன ஸ்விட்சர்லாந்தின் பெல் அண்ட் ராஸ் என்ற கம்பெனி இதனை தயாரித்துள்ளது.
இந்நிறுவனம் விமானிகள், ராணுவ வீரர்களுக்கு என்று பிரத்யேகமாக இந்த வாட்ச்-ஐ தயாரித்துவருகிறது. இதுமட்டுமின்றி பிரான்ஸ் நாட்டின் ராணுவத்துக்கும் இவர்கள் பிரத்யேகமாக வாட்ச்கள் தயாரித்து கொடுக்கின்றனர்.
இந்த வாட்ச்சில் விமானி அறையில் உள்ள காக்பெட் போன்று கறுப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாட்சின் நம்பர் விமானத்தில் இருப்பது போல் காணப்படும்.
இதனை தண்ணீரில் போட்டினாலும் கெடாது. இந்த வாட்ச் பிரான்ஸில் நடைபெற்ற ரபேல் விமான கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது தவிர வாட்ச்சில் மேலும் சில அம்சங்களும் உள்ளன எனவும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/