Advertisment

அள்ளிக் கொடுக்கும் லாரன்ஸ்: அம்மா உணவகத்திற்கு 50 லட்சம் நிதியுதவி!

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக திறந்திருக்கும் சில உணவகங்களிலும் அதிகம் பேர் பார்சல் வாங்கி சாப்பிட முடிவதில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Raghava Lawrence

Raghava Lawrence

Raghava Lawrence : கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆதோடு பெரும்பாலான உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக திறந்திருக்கும் சில உணவகங்களிலும் அதிகம் பேர் பார்சல் வாங்கி சாப்பிட முடிவதில்லை.

Advertisment

புலம் பெயர் தொழிலாளர்கள், வீடுகளின்றி வசிப்போர், பணி ரீதியாக வீடுகளை விட்டு வெளியே தங்கியிருப்போர் ஆகியோர்கள் சாப்பாட்டுக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் அனைத்து அம்மா உணவகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

பல இடங்களில் அம்மா உணவகங்களில் இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டிற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சம் அளித்துள்ளார். இந்தத் தகவலை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

 

Raghava Lawrence
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment