Advertisment

ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை; நீலகிரியில் நடந்தது என்ன?

காங்கிரஸ் முன்னாள் தலைவர், வயநாடு எம்.பி. ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனை நீலகிரியில் நடந்தது.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi declares over Rs 20 crore in assets Tamil News

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rahul Gandhi | Nilgiris | Lok Sabha Election | காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.

ஹெலிகாப்டர் நீலகிரியில் தரையிறங்கியதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisment

ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான கேரளாவின் வயநாட்டிற்குச் சென்று கொண்டிருந்தார், அங்கு அவர் பொதுக் கூட்டம் உட்பட பல பிரச்சார நடவடிக்கைகளில் பங்கேற்க இருந்தார்.

ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் இருந்து இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.

நாடு முழுக்க மக்களவை தேர்தல் ஏப்.19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாட்டின் சில இடங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Rahul Gandhi Nilgiris Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment