/indian-express-tamil/media/media_files/Y0brY5EMie1eRx9UmMRj.jpg)
எனினும், சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பயண நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
southern railway: மதுரையில் இருந்து சென்னை செல்லும் பாண்டியன், நெல்லை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகிய அதிவிரைவு ரயில்களின் இயக்க நேரம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எனினும், சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பயண நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இதற்கிடையில், திருநெல்வேலி-சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லும் போது வைகை எக்ஸ்பிரஸ் இருபுறமும் 15 நிமிடம் தாமதமாக வந்ததாக ரயில்வே தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, சென்னையிலிருந்து தென் தமிழ்நாடு வரை. இரு திசைகளிலும் பேர்ல் சிட்டி (முத்து நகர்) எக்ஸ்பிரஸின் ஒட்டுமொத்த பயண நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக, 34 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 199 ரயில்களுக்கு பல்வேறு நிலையங்களில் நிறுத்தங்கள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் மண்டல ரயில்வே தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “வந்தே பாரத் கட்டணத்தை குறைக்க வேண்டும்; ரயில்களின் வேகத்தை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.