/tamil-ie/media/media_files/uploads/2022/08/aa-Cover-bemabt1n02m2qlob8721uj6fq0-20190629025946.Medi_.jpeg)
தமிழகத்தில் பெய்ந்து வரும் தொடர் மழையால் தேனி, திருவாரூர், வால்பாறை, கொடைக்கானலில் பள்ளிகள்ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நீலகிரி, கோவை, விருந்துநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை, நகரின் சில பகுதிகளில் சேலாசனது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தேனி, திருவாரூர், வால்பாறை, கொடைக்கானலில் பள்ளிகள்ளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.