கனமழை பெய்து வருவதால், 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டதிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை வரும் 4ம் தேதி வரை நீடிக்கும் என்பதால், மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால், நகரமே தண்ணீர் சூழ்ந்துள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.