Advertisment

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
tamil news

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகி உள்ள  தேஜ் புயல் நேற்றிரவு 11.30 மணியளவில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு  அரபி கடலில், சஜோத்ரா நகருக்கு 30 கி.மீ கிழக்கு- தென்கிழக்கேயும், சலாலா நகருக்கு 690 கி.மீ தெற்கு – தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா நகருக்கு 720 கி.மீ தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5  நாட்களுக்கு மழைப்பு வாய்ப்பு இருப்பதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment