/tamil-ie/media/media_files/uploads/2018/07/valparai-heavy-rain.jpg)
சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் மழை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு அனைத்து சாத்தியக்க் கூறுகளும் இருந்த நிலையில், மழை பெய்யாமல் மக்களை ஏமாற்றியது. இந்நிலையில் நேற்று (29.9.18) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர், பாலசந்திரன்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல்வரை ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. இது மேலும் மேற்கு நோக்கி நகரும்போது வடகிழக்கு பருவக்காற்று வலுவடைந்து அதன் காரணமாக வரும் நவம்பர் 1 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
வடகிழக்கு பருவமழை நவம்பர் 1ம் தேதி வாக்கில் தமிழகம், புதுவை, மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, ராயல்சீமா, தெற்கு உள்கடலோர கர்நாடகா, கேரளாவில் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி வருகிறது.” என்று கூறினார்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.