Advertisment

சென்னையின் செப்டம்பர் மழை வறண்ட கிணறுகளை உயிர்பித்திருக்கிறது!

கோயம்பேடு, சூளைமேடு போன்ற பகுதிகளில் வறண்டிருந்த சில கிணறுகளில் இப்போது தண்ணீர் நிரம்பியுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai September Rain

Chennai September Rain

Chennai: செப்டம்பர் மாதத்தில் சென்னை ஓரளவு ஈரப்பதத்துடனேயே இருந்தது. மழையியல் மையம் நடத்திய ஆய்வில், மைலாப்பூர், விருகம்பாக்கம், கோட்டூர்புரம் மற்றும் திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் நீர் அட்டவணை கடந்த மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. கோயம்பேடு, சூளைமேடு போன்ற பகுதிகளில் வறண்டிருந்த சில கிணறுகளில் இப்போது தண்ணீர் நிரம்பியுள்ளது.

Advertisment

செப்டம்பரில் பெய்த மழை மக்களுக்கும், ஒரு சில நிறுவனங்களுக்கும் மழை நீரை சேமிக்க உதவியது. உண்மையில், கடந்த சில ஆண்டுகளாக மழைநீரைப் பயன்படுத்துவது நகரத்தின் சில இடங்களில் அதிகரித்துள்ளது. திருவான்மியூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள், கிட்டத்தட்ட ஒரு வருடமாக குழாயில் தண்ணீர் வராவிட்டாலும்,  நிலத்தடி நீர் இருப்பதால், டேங்கர் லாரியில் தண்ணீரை வாங்கவில்லை என்கிறார்கள். சராசரியாக, தினமும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் இங்கு பயன்படுத்தப்படுகிறது.

திருவான்மியூர் ஏட்ரியம் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், “எங்கள் ஆறு ஏக்கர் வளாகத்தில் 25 ரீசார்ஜ் கிணறுகள் உள்ளன. இது நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்வதற்கும் நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. வளாகத்தில் நீர் தேங்குவதைத் தடுக்க மேலும் நான்கு ரீசார்ஜ் கிணறுகளை நாங்கள் சேர்த்திருக்கிறோம்” என்றார்.

அதோடு ராயப்பேட்டை மற்றும் வி.எஸ்.ஐ எஸ்டேட் பேஸ் II ஆகிய இடங்களில் உள்ள இரண்டு நிறுவனங்கள் நிலத்தடி நீரில் தன்னிறைவு பெற்றுள்ளன. ரெய்ன் செண்டரின் இயக்குனர் சேகர் ராகவன் கூறுகையில், ராயப்பேட்டையில் உள்ள நிறுவனம் இப்போது அதிக ரீசார்ஜ் கிணறுகளைக் கொண்டிருக்கிறது. இது வறட்சியின் போது நீர் தேவைகளை பூர்த்தி செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனம் தண்ணீர் வாங்குவதை நிறுத்தியுள்ளது என்றார்.

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment