பாதாள சாக்கடை நிரம்பி, சாலையில் ஓடிய கழிவு நீர்: கோடை மழைக்கே கதி கலங்கிய கோவை

கோவையில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கின.

கோவையில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கின.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலுக்கு மத்தியில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று கோவை மாவட்டத்தில் உக்கடம், கவுண்டம்பாளையம், காந்திபுரம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Advertisment

இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

publive-image

இந்நிலையில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கி நின்றதால் அவ்வழியாக வந்த கார் ஒன்று மேம்பாலம் அடியில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

Advertisment
Advertisements
publive-image

மேலும், கனமழையால் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாய்கள் நிறைந்து, கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது. சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை ஓரத்தில் கழிவு நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

publive-image

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் டேங்கர் லாரிகள் மூலம் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீர் செய்து, தேங்கிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

செய்தி: பி.ரஹ்மான். கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: