/indian-express-tamil/media/media_files/2025/08/18/cpr-2025-08-18-07-50-32.jpg)
Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 19, 2025 21:37 IST
மு.க. ஸ்டாலின் - துர்கா திருமணம் 50 ஆண்டுகள் நிறைவு; கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து
மு.க. ஸ்டாலின் - துர்கா திருமணம் 50 ஆண்டுகள் நிறைவு; கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்துமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் திருமணம் நடைபெற்று 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் இருவரையும் நேரில் வாழ்த்தினர். இது குறித்து மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.
இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Aug 19, 2025 21:29 IST
இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சுதர்சன் ரெட்டி அவர்களின் வேட்புமனு, நெருக்கடியான நிலையில் உள்ள நமது அமைப்புகளையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும். வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிரானவர் சுதர்சன் ரெட்டி. நமது பன்முகத்தன்மை, சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான போராட்டம் ஆகியவற்றை உறுதி செய்வதில் அவர் உறுதியாக இருப்பார்" என்று கூறியுள்ளார்.
- Aug 19, 2025 21:24 IST
நீட் முதுகலை 2025 தேர்வு முடிவுகள் வெளியீடு
முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி (NEET PG) 2025 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளைத் தேர்வர்கள் https://natboard.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்ற நீட் பிஜி தேர்வுகளுக்கான முடிவுகள், தேர்வுகள் நடந்து 16 நாட்களில் தற்போது வெளியாகியுள்ளன.
- Aug 19, 2025 21:11 IST
மூத்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழகத்தில் மூன்று மூத்த காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டாக்டர் என்.ஸ்ரீநாத், ஐ.பி.எஸ், காவல்துறை கண்காணிப்பாளர்/காவல்துறை உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல், சட்டம் ஒழுங்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை, தற்போதுள்ள காலிப் பணியிடத்தில் சென்னை பெருநகர காவல்துறை, சைபர் குற்றப்பிரிவு, துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜே.முத்தரசி, ஐ.பி.எஸ், காவல்துறை கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு சிஐடி, தென் மண்டலம், சென்னை, டாக்டர் என்.ஸ்ரீநாத், ஐ.பி.எஸ்-க்கு பதிலாக சென்னை காவல்துறை கண்காணிப்பாளர்/காவல்துறை உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல், சட்டம் ஒழுங்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.அதிவீரபாண்டியன், ஐ.பி.எஸ், காவல்துறை கண்காணிப்பாளர், காலியிடப் பிரிவு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை, எஸ்.சர்வேஷ் ராஜ், ஐ.பி.எஸ்-க்கு பதிலாக, சென்னை காவல்துறை கண்காணிப்பாளர், மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
- Aug 19, 2025 21:06 IST
ஆபாச வீடியோ பதிவேற்றம் : ஏ.ஐ மூலம் தடுக்க டி.ஜி.பி-க்கு ஐகோர்ட் உத்தரவு
"இணையதளங்களில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை ஏ.ஐ மூலம் தடுக்க உடனடியாக பரிசீலிக்க வேண்டும்" என்று அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் டி.ஜி.பி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Aug 19, 2025 20:44 IST
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு
"எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்" என்ற தலைப்பில் வெளியான அறிக்கைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.
- Aug 19, 2025 20:33 IST
துணை ஜனாதிபதி தேர்தல்: தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் மற்றும் தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து ஆதரவு திரட்டுவது பற்றியும், தி.மு.க தலைமையிலான கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், விரைவில் நடைபெறவுள்ள தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Aug 19, 2025 20:04 IST
தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி முடிவு
சென்னையில் மண்டலம் வாரியாக தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. "ஒவ்வொரு மண்டலமாக நாளொன்றுக்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போது நாளொன்றுக்கு 1,500 முதல் 2,000 நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிகிறது" என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- Aug 19, 2025 19:36 IST
குளம்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு நிர்மலா சீதாராமன் நிதி விடுவிப்பார் - ஸ்டாலின் நம்பிக்கை
குளம்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அரசின் மீன்வளம் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளம்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.350 கோடி நிதி வழங்குமாறு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "குளம்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- Aug 19, 2025 18:57 IST
தமிழ்நாட்டுக்கு ரூ. 4850 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் - ஸ்டாலின்
நபார்டு நிதி ரூ.4,500 கோடி மற்றும் குளச்சல் துறைமுக விரிவாக்க பணிகளுக்காக ரூ.350 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
- Aug 19, 2025 18:35 IST
சென்னையில் நாய் கடித்து ஒருவர் மரணம்
சென்னை குமரன் நகரில் பிட்புல் ரக நாய் கடித்து படுகாயம் அடைந்த கருணாகரன் என்பவர் உயிரிழந்தார்
- Aug 19, 2025 18:14 IST
ராப் பாடகர் வேடனை நாளை வரை கைது செய்ய தடை
ராப் இசைப் பாடகர் வேடனை நாளை (ஆகஸ்ட் 20) வரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் புகார் அளித்திருந்த நிலையில், ஒருமித்த கருத்துடன் உறவில் இருந்ததாகவும் தனிப்பட்ட மோதலுக்கு பின் புகார் என முன் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது வேடன் தரப்பு வாதத்தை முன்வைத்ததையடுத்து கைது செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது
- Aug 19, 2025 17:53 IST
மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது; தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் - உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை
எங்கள் பணியை மதித்து பாராட்டாவிடினும், அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது
- Aug 19, 2025 17:18 IST
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து
சென்னை ராஜா அண்னாமலைபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 5வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 19, 2025 16:58 IST
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன் ), ஸ்மிருதி (துணை கேப்டன்), பிரத்திகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா , ஜெமிமா, ரேணுகா, அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ், கிராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா , சினே ராணா உள்ளனர்.
- Aug 19, 2025 16:56 IST
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தண்டைக்குரிய குற்றமாக்கும் இந்த மசோதா, நாளை (ஆக.20) மக்களவையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
- Aug 19, 2025 16:06 IST
ஐ.பெரியசாமிக்கு விரைவில் சம்மன் அனுப்ப முடிவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றொரு மகன் பிரபு, மகள் இந்திராணி ஆகியோர் வீடு உள்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ந்தேதி அதிரடி சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். நடந்து முடிந்த அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 19, 2025 15:42 IST
நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நபார்டு நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார் தங்கம் தென்னரசு. நபார்டு நிதி விடுவிப்பு குறித்து முதல்வர் எழுதிய கடிதத்தையும் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.
- Aug 19, 2025 15:16 IST
இ.பி.எஸ்.க்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் கண்டனம்
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க தவறினால் தமிழ்நாடு தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பதுதான் எங்களின் பணி. அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும், இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது. இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 19, 2025 15:13 IST
பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் சீனா பயணம்
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். 31ம் தேதி சீனா செல்லும் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த பயணத்தின்போது சீன அதிபரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது வர்த்தகம், இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 19, 2025 15:10 IST
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- Aug 19, 2025 15:09 IST
கடந்த ஓராண்டில் சட்டவிரோத மது விற்பனை: 14,922 பேர் கைது
கடந்த ஓராண்டில் வடக்கு மண்டல காவல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 14,922 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் 68,004 லிட்டர் எரி சாராயம், மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது.
- Aug 19, 2025 15:07 IST
ஆசிய கோப்பை: சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி
ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர் ஆலோசனை நடத்தி அணியை தேர்வு செய்தனர் . தேர்வு கூட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்து கலந்து கொண்டார். சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) , கில் (துணை கேப்டன் ), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா , ஹர்திக் பாண்டியா , ஷிவம் துபே, அக்சர் படேல் , ஜிதேஷ் சர்மா , பும்ரா, அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, குல்தீப், சஞ்சு சாம்சன் , ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
- Aug 19, 2025 14:25 IST
2-வது நாளாக சென்னையில் போராட்டம் - போக்குவரத்து ஊழியர்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Aug 19, 2025 14:22 IST
கிட்னி விற்பனை விவகாரம்: மக்களின் உரிமையை பாதுகாக்க அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
சட்டவிரோத கிட்னி விற்பனை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாணையில்,கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், ஏழை, எளிய மக்கள் உயிர் வாழும் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை என அறிவுறுத்தியுள்ளனர்.
- Aug 19, 2025 13:27 IST
எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது: மா.சுப்பிரமணியன் பதிலடி
வேலூர் அணைக்கட்டு பகுதியில் நடந்த அதிமுக பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்ததாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில், “எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
- Aug 19, 2025 13:21 IST
காட்சிகள் நீக்க விவகாரம் - மனுஷி படத்தை பார்க்கும் நீதிபதி
மனுஷி படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனுஷி படத்தை ஆகஸ்ட் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பார்வையிட உள்ளார்.
- Aug 19, 2025 13:18 IST
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிப்பு
துணைக்குடியரசு தலைவர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், என்.டி.ஏ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்தியா கூட்டணி சார்பில், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
- Aug 19, 2025 12:56 IST
ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளில் 23% கணக்குகள், செயலற்ற நிலையில் உள்ளது: ஒன்றிய அரசு
ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 56.04 கோடி வங்கிக் கணக்குகளில் 23% கணக்குகள், எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவையில் ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.75 கோடி, பீகாரில் 1.39 கோடி என நாடு முழுவதும் 13.04 கோடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 19, 2025 12:51 IST
டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ரேணுகா தேவி உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தி வருகிறார்.
- Aug 19, 2025 12:38 IST
அமித்ஷா பங்கேற்றும் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது தவறான தகவல் - நெல்லை மாநகர காவல் துறை
நெல்லையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றும் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது தவறான தகவல்; பேனர் வைப்பதற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்று பூத் கமிட்டி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறி பாஜக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில் நெல்லை மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
- Aug 19, 2025 12:36 IST
"முன்னாள் முதல்வர், மிரட்டும் தொனியில் பேசுவது அநாகரீக செயல்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
"ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை நடத்திவிட்டு, தான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடப்படுவதாக சொல்கிறார் இபிஎஸ். 'அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய்' என்பதுபோல, ஆம்புலன்ஸை பார்த்தாலே அவருக்கு வேறு ஏதோ ஞாபகம் வருகிறதுபோல. ஒரு முன்னாள் முதல்வர், மிரட்டும் தொனியில் பேசுவது அநாகரீக செயல்” என்று தனது கூட்டங்களுக்கு இடையே வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் விடப்படுவதாக எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
- Aug 19, 2025 12:00 IST
எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால், மக்களவை பகல் 12 மணி வரைக்கும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
- Aug 19, 2025 11:53 IST
தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆலோசனை
அன்புமணி விவகாரம் குறித்து விவாதிக்க தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை நடத்தி வருகிறது. 16 குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- Aug 19, 2025 11:52 IST
45 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவிப் பொறியாளர் பணிக்கு தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெடுஞ்சாலைத் துறைக்கு தேர்வானவர்களுக்கும் பணி ஆணை வழங்கினார்.
- Aug 19, 2025 11:51 IST
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) காலமானார்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) காலமானார். உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- Aug 19, 2025 11:50 IST
எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை!
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த மனுவை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
- Aug 19, 2025 11:48 IST
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டம்: தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,442 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது.
- Aug 19, 2025 11:20 IST
தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவி மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல்
தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
- Aug 19, 2025 11:11 IST
என்.டி.ஏ கூட்டணி எம்.பி-க்கள் கூட்டம் தொடக்கம்
பிரதமர் மோடி, இரு அவைகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். எம்.பி-க்களிடம் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை மோடி அறிமுகம் செய்துள்ளார்.
- Aug 19, 2025 11:09 IST
காக்கும் கரங்கள் திட்டம் - தொடங்கி வைத்த ஸ்டாலின்
முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தை தொடங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- Aug 19, 2025 10:30 IST
பருத்தி மீதான இறக்குமதி வரி 11% ரத்து - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% இறக்குமதி வரிக்குக் கூடுதலாக, மேலும் 25% வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இந்தியாவின் மொத்த இறக்குமதி வரி 50% ஆக உயரும் நிலை ஏற்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அனுப்பும் பொருட்களுக்கு 50% வரி விதித்ததால் ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் பற்றாக்குறையால் இந்தியாவில் ஆடை உற்பத்தி குறைந்த நிலையில் டிரம்ப் வரியால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். இதனிடையே பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆக.19 முதல் செப். 30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு ஒன்றிய அரசு விலக்கு அளித்துள்ளது.
- Aug 19, 2025 09:59 IST
தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு!
தங்கம்விலைசவரனுக்குரூ.320 குறைந்துகிராமுக்குரூ.40 குறைந்துள்ளது. ஒருசவரன்ரூ.73,880க்குவிற்பனையாகிறது.
- Aug 19, 2025 09:41 IST
சன்னிதானத்தில் காலணியுடன் நின்ற போலீஸ்
சபரிமலை சன்னிதான பகுதியில் காலணியுடன் நின்ற காவல்துறை அதிகாரி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு முகாம் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
- Aug 19, 2025 09:12 IST
ராமதாஸ் - அன்புமணி சண்டை நாடகம் - காடுவெட்டி குருவின் மகள்
பா.ம.க.வில் இருவரது சண்டையால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது, அரசியலுக்காக வேண்டுமென்றே நாடகம் ஆடுகின்றனர் என்று காடுவெட்டி குருவின் மகள் தெரிவித்துள்ளார்.
- Aug 19, 2025 09:10 IST
அதிமுக சார்பில் எல்.இ.டி பேரணி துவக்கம்
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வரும் 20ம் தேதி `மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எல்.இ.டி வாகன இருசக்கர பேரணியை ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தொடங்கி வைத்தார்.
- Aug 19, 2025 09:08 IST
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!
அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா தெற்கு சட்டீஸ்கர் வழியே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 19, 2025 09:06 IST
சுவாசக்குழாயில் மாத்திரை சிக்கியதால் 4 வயது குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் பி.ஆர். பள்ளி கிராமத்தில் சுவாசக்குழாயில் மாத்திரை சிக்கியதால் 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தைகளுக்கு மாத்திரையை அப்படியே கொடுக்காமல பொடியாக மாற்றி குழைத்து கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
- Aug 19, 2025 08:32 IST
ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டிய இபிஎஸ்
வேலூர் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற சுற்றுப்பயண கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்சால் டென்ஷனான இபிஎஸ். நோயாளி இன்றி வேண்டும் என்றே ஆம்புலன்ஸை கூட்டத்திற்கு நடுவே இயக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். சுமார் 30-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் இதுபோன்று நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஓட்டுநர் நோயாளி ஆவார் என இபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- Aug 19, 2025 08:31 IST
2 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி - எலும்பு கூடாக கண்டெடுப்பு
குமரி ஆரல்வாய்மொழி அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி ராஜலிங்கம்(38) சீதப்பால் மலை உச்சியில் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். எலும்பு கூடை மருத்துவ ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலிஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.