/indian-express-tamil/media/media_files/2025/05/30/mZacUlj214VNnTEskvCc.jpg)
Today Latest Live News Update in Tamil 25 June 2025:பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 25, 2025 21:18 IST
‘அணுசக்தி வேண்டாம்’: அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த வாரம் பேச்சுவார்த்தை - டிரம்ப்
நெதர்லாந்தில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் புதன்கிழமை அன்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார். டிரம்ப் தனது உரையில், "ஈரானுடன் அடுத்த வாரம் நாங்கள் பேசப் போகிறோம். நாங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம், எனக்குத் தெரியவில்லை, நான் ஒப்பந்தம் செய்தாலும் இல்லாவிட்டாலும் எனக்குக் கவலையில்லை. நாங்கள் முன்பு கேட்டது போலவே ஒரே ஒரு விஷயத்தைத்தான் கேட்போம், எங்களுக்கு அணுசக்தி வேண்டாம்," என்று கூறினார்.
-
Jun 25, 2025 20:33 IST
தி.மு.க ஆட்சியில் ஏற்றப்பட்ட வரியால் மக்கள் பாதிப்பு; கட்டண உயர்வைக் குறைக்க தோன்றவில்லையா? - இ.பி.எஸ்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டண வரி, தொழில் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளை குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Jun 25, 2025 20:28 IST
இந்த மாவட்டங்களில் இரவு 10 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (ஜூன் 25, 2025) இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்க்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Jun 25, 2025 19:58 IST
வேலூரில் கலைஞர் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார் ஸ்டாலின்
வேலூர் செங்கநல்லூரில் தி.மு.க சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட 'கலைஞர் அறிவாலயம்' மற்றும் 700 கிலோ எடை கொண்ட வெண்கலத்தால் நிறுவப்பட்ட கலைஞர் கருணாநிதி சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வு திராவிட முன்னேற்றக் கழகத்தினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் அறிவாலயத்தின் திறப்பு விழா நடைபெற்ற பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 30 அடி உயரக் கொடிக்கம்பத்தில் தி.மு.க கொடியையும் ஏற்றி வைத்தார்.
-
Jun 25, 2025 19:33 IST
போதைப் பொருள் வழக்கு: ஒவ்வாமை இருப்பதால் பயன்படுத்த வாய்ப்பில்லை - நடிகர் கிருஷ்ணா வாக்குமூலம்
போதைப் பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தில், தனக்கு இரைப்பை ஒவ்வாமை (gastric allergy) இருப்பதால் போதைப் பொருள் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய பிரதீப் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நடிகர் கிருஷ்ணாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கிருஷ்ணா தனது வாக்குமூலத்தில் கீழ்க்கண்ட முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்:
“எனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை; எனக்கு இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அது தொடர்பாக சிகிச்சை எடுத்து வருகிறேன்; பிரதீப் குமாருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நான் பழகி வந்தேன். அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து நான் போதைப் பொருள் வாங்கிச் செல்வதாக தவறாக தெரிவித்துள்ளார் பிரதீப். மருத்துவ பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா மீது அடுத்த கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
-
Jun 25, 2025 19:25 IST
எம்.எல்.ஏ அருளுக்கு புதிய பொறுப்பு அளித்த ராமதாஸ்; நீக்கிய அன்புமணி
பா.ம.க மாநில இணைப் பொதுச் செயலாளராக எம்.எல்.ஏ. அருள் நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அவரை கட்சிப் பொறுப்பிலிருந்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நீக்கினார். சேலம் மாநகர மாவட்டச் செயலாளராக க. சரவணனை நியமனம் செய்தார்.
பா.ம.க மாநில இணைப் பொதுச் செயலாளராக அருளை நியமித்தவர் ராமதாஸ். ஆனால், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அருளை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கியதாக அறிவித்தார். இதற்கு பதிலளித்த அருள், "கட்சிப் பொறுப்பிலிருந்து என்னை நீக்க அன்புமணிக்கோ அல்லது வேறு யாருக்குமே அதிகாரமில்லை. நான் ராமதாஸால் நியமிக்கப்பட்டேன்" என்று கூறினார். இந்த விவகாரம் பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சேலம் மாநகர மாவட்டச் செயலாளராக க.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Jun 25, 2025 19:14 IST
வேலூர் மாவட்டத்தில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினர் மு.க.ஸ்டாலின்
வேலூர் மாவட்டத்தில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் சொந்த வீட்டு கனவை நனவாக்கியுள்ளனர்.
வேலூர் சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 பேருக்கு நேரடியாக பட்டாக்களை வழங்கி, இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் வேலூர் மாவட்டத்தில் நிலமற்ற ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
-
Jun 25, 2025 18:55 IST
தவெகவினர் மீது பொய் வழக்கு - புஸ்ஸி ஆனந்த்
தவெக நிகழ்ச்சி என்றால் யாரும் இடம் தரக்கூடாது எனச் சொல்லும் தமிழக அரசு மாநாடு முடிந்த பிறகு, தொண்டர்கள் எறும்புபோல அனைத்து இடத்திலும் உள்ளதை புரிந்துகொண்டனர். தவெகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு வருகின்றனர் என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
-
Jun 25, 2025 18:28 IST
'கூலி' படத்திலிருந்து 'சிக்கிட்டு' பாடல் வெளியீடு
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தின் வெற்றிப்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அறிவு, அனிருத், டி.ராஜேந்தர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
-
Jun 25, 2025 18:27 IST
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய- மாநில அரசுகளுக்கு உண்டு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
Jun 25, 2025 18:24 IST
மடிக்கணினி-பன்னாட்டு நிறுவனங்கள் டெண்டரில் ஆர்வம்
மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்ட டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது. டெல், ஏசர், லெனோவா, எச்பி உள்ளிட்ட நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. டெண்டருக்கு முன் நடந்த கூட்டத்தில் நிறுவனங்களின் சந்தேகங்களுக்கு எல்காட் நிறுவனம் விளக்கம் அளித்தது.
-
Jun 25, 2025 18:05 IST
போராடும் மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்? - அண்ணாமலை கேள்வி
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது; சென்னை பெருங்குடி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், மேலும் மேலும் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? நல்ல குடிநீர், தரமான உணவு என எதுவும் வழங்கப்படுவதில்லை. சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படி என்றால், இதர மாணவ, மாணவியர் விடுதிகளின் நிலை எத்தனை மோசமாக இருக்கும்? அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று திமுக அரசு சார்பில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக அரசு, வழக்கம்போல இந்தப் பிரச்சினையை மடைமாற்றிவிடலாம் என்று எண்ணினால், அது நடக்காது. அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தரமான உணவு, நல்ல குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அண்ணாமலை கேட்டு கொண்டுள்ளார்.
-
Jun 25, 2025 17:51 IST
"சுங்கச் சாவடிகளை விரைந்து கடந்து செல்வதற்கு மாற்று வழி இல்லையா?"
ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் செலுத்திச் செல்ல அரைமணி நேரமாகிறது என்று ஐகோர்ட் கிளை கவலை தெரிவித்துள்ளது. மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட்ரமணா தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,” எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jun 25, 2025 17:33 IST
சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு
சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும்; சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு 2வது கட்ட பொதுத்தேர்வு கட்டாயமல்ல; மாணவர்கள் விருப்பம். உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முதல்கட்ட பொதுத்தேர்வு முடிவு ஏப்ரலிலும், 2ம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 25, 2025 17:29 IST
13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 25, 2025 17:19 IST
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல்நிலை கவலைக்கிடம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் (வயது 101). ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த அச்சுதானந்தன் 2006 முதல் 2011வரை கேரள முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார். அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர் குழுவின் கண்காணிப்பில் தொடந்து இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Jun 25, 2025 17:17 IST
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 41 குளங்கள் புனரமைப்பு
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பாண்டில் ரூ.119.12 கோடி மதிப்பீட்டில் 41 குளங்கள் புனரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. திருவொற்றியூர் மண்டலம், வார்டு-3 எண்ணூர் விரைவுச் சாலை, அன்னை சிவகாமி குளத்தில் ரூ.8.40 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-4 ஏ.டி. காலனி ஏரியில் ரூ.6 கோடி, கே.எச். சாலை, ரயில்வே குளத்தில் ரூ.5.50 கோடி, வார்டு-6 அம்பேத்கர் குளத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Jun 25, 2025 17:12 IST
ரூ.100 கோடி வசூல் செய்த 'குபேரா' படம் - படக்குழு அறிவிப்பு
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ''குபேரா'' படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். நேற்றுமுன்தினம் வெளியான 'குபேரா' படம் கதை ரீதியாக நல்ல விமர்சனங்களையும், திரைக்கதை ரீதியாக கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. குபேரா படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Jun 25, 2025 17:06 IST
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை
போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை பிடித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின்படி கிருஷ்ணாவிடம் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலம் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப்பொருள் வாங்கியதாக பிரதீப் வாக்குமூலம் அளித்தார்.
-
Jun 25, 2025 16:52 IST
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் - டெண்டரில் Dell, Acer, Lenovo, HP உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள விருப்பம் காட்டுகின்றன.
-
Jun 25, 2025 16:48 IST
உலகளவில் ரூ.100 கோடி வசூலை குவித்த குபேரா
உலகளவில் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தானா உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 20ம் தேதி திரைக்கு வந்தது குபேரா.
-
Jun 25, 2025 16:18 IST
சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு-அனைவரும் விடுதலை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது 2006ல் நடந்த கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் திண்டிவனம் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கு கடந்த 2011ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பின்னர் புலன் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த 21.11.2014ல் இவ்வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது பாருக் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம், அவரது சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதையடுத்து இவ்வழக்கில் திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது பாரூக் இன்று தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
Jun 25, 2025 16:15 IST
காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல் வைத்திருந்த 4 சிறுவர்களுக்கு வியாசர்பாடி எம்.கே.பி.நகர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் பென்சாம் மொட்டை அடிக்க வைத்ததாக குற்றச்சாட்டு
வடக்கு மண்டல இணை ஆணையர், கூடுதல் ஆணையர், புளியந்தோப்பு துணை ஆணையர் விசாரணை. பென்சாமை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு
-
Jun 25, 2025 15:45 IST
கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிப்பு
-
Jun 25, 2025 15:27 IST
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு தகுதி கிடையாது
எங்களுடன் War செய்ய அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு தகுதி கிடையாது
டி.ஆர்.பி.ராஜா, திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்
-
Jun 25, 2025 15:02 IST
திடீரென 80 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முன் உள்ள கடல், 6 மாதங்களுக்கு பிறகு திடீரென 80 அடிக்கு உள்வாங்கியுள்ளது. அதன் ஆபத்தை உணராமல் பாசி படிந்த பாறைகள் மீது ஏறி, பக்தர்கள் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.
-
Jun 25, 2025 15:00 IST
அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு
வேலூரில் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 550 படுக்கைகள், 16 அறுவை சிகிச்சை மையங்களுடன் திறக்கப்பட்ட அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
-
Jun 25, 2025 15:00 IST
ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்
ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும், ரிஷப் பண்ட் 7ம் இடத்திலும், சுப்மன் கில் 20வது இடத்திலும், கே.எல்.ராகுல் 38வது இடத்திலும் உள்ளனர்
-
Jun 25, 2025 14:59 IST
பவன் கல்யாண் புகைப்படம் மார்ஃபிங்" -3 பேர் கைது
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகள் பதிவு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யோகா தின விழாவில் விசாகபட்டினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை டேக் செய்து பவன் கல்யாண் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்த, கோனசீமாவைச் சேர்ந்த சாய் வர்மா, மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த ராமஞ்சனேயுலு, ஐதராபாத்தைச் சேர்ந்த ஷேக் மஹ்பூ கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Jun 25, 2025 14:08 IST
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவா? - ஆட்சியர் விளக்கம்
கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, வயநாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் முண்டக்கை பகுதியில் உள்ள ஆற்றில் மண் கலந்த நீர் பாய்ந்து வருகிறது நிலச்சரிவு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என வயநாடு மாவட்ட ஆட்சியர்தெரிவித்துள்ளார்.
-
Jun 25, 2025 14:07 IST
ARR பாடலை விரும்பிக் கேட்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா
விண்வெளிக்கு புறப்படும் முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை விரும்பிக் கேட்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா. 2004ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பின்னணி பாடகர்கள் உதித் நாராயணன், ஹரிஹரன் இணைந்து பாடிய `யூன் ஹி சலச் சல்' பாடலை ரசித்துக் கேட்டு ரிலாக்ஸ் ஆன சுபான்ஷு சுக்லா
-
Jun 25, 2025 14:06 IST
இந்திய வீரரின் விண்வெளி பயணம் - பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியா, ஹங்கேரி, போலந்து, அமெரிக்க வீரர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை வரவேற்கிறோம். 1.4 பில்லியன் இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள், அபிலாஷைகளை தன்னுடன் சுமந்து செல்லும் சுபான்ஷு சுக்லாவுக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
Jun 25, 2025 13:23 IST
ஆலந்தூரில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கக் கோரி வழக்கு
ஆலந்தூர் மாவடிகுளத்தில் சட்டவிரோதமாக நடக்கும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டவிதிகளை பின்பற்றாமல் 500 கனரக வாகனங்கள் மூலம் நாள்தோறும் மணல் கொள்ளை நடைபெறுகிறது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
-
Jun 25, 2025 13:12 IST
என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தல் சீட் - ராமதாஸ்
“என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தல் சீட். பாமகவில் எனக்கே முழு அதிகாரம் உள்ளது; என்னை சந்தித்து கட்சியில் பொறுப்பு வாங்கிய நிர்வாகிகளுக்கே தேர்தல் சீட் வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Jun 25, 2025 13:10 IST
என் தோளில் மூவர்ணக் கொடி – சுபான்ஷு சுக்லா பெருமிதம்
இது ஒரு சிறந்த பயணம், என் தோளில் மூவர்ணக் கொடி உள்ளது என க்ரு-டிராகன் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தில் ஒன்றாக இறங்குவோம். பல வருடங்களுக்குப் பிறகு நாம் மீண்டும் விண்வெளியை அடைந்துள்ளோம். ஒவ்வொரு இந்தியரும் இந்தப் பயணத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 25, 2025 13:08 IST
இளைஞர்களுக்கு மொட்டை அடித்த விவகாரத்தில் எம்.கே.பி. நகர் காவல் ஆய்வாளர் மாற்றம்
இளைஞர்களுக்கு மொட்டை அடித்த விவகாரத்தில் எம்.கே.பி. நகர் காவல் ஆய்வாளர் மாற்றம். எம்.கே.பி. நகர் காவல் ஆய்வாளர் பென்ஸாம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்த இளைஞர்களுக்கு ஆய்வாளர் பென்ஸாம் மொட்டை அடித்ததாக புகார் எழுந்தது.
-
Jun 25, 2025 12:48 IST
12 மாநிலங்களுக்கு 21 வெடிகுண்டு மிரட்டல்... பெண் ஐடி ஊழியர் கைது!
நாடு முழுவதும் 12 மாநிலங்களுக்கு 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த சென்னை பெண் ஐ.டி ஊழியர் ரீனே ஜோசிடா கைது; ரோபோடிக் இஞ்சினியரிங் படித்த ரீனே, தான் ஒருதலையாக காதலித்துவந்த இளைஞரை பழிவாங்க, அவர் பெயரில் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்தது அம்பலம். மத நிகழ்வுகளிலும் முக்கியத் தலைவர்களின் நிகழ்ச்சிகளிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், நரேந்திர மோடி மைதானம், பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், ஏர் இந்தியா விமான விபத்திற்கு தானே பொறுப்பு எனவும் பல்வேறு இமெயில்களை இளைஞரின் பெயரில் ரீனே அனுப்பியது, அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸின் விசாரணையில் அம்பலம்
-
Jun 25, 2025 12:43 IST
ஃபால்கன் 9 ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்தது
ஃபால்கன் 9 ராக்கெட் புறப்பட்ட 8 நிமிடங்களில் முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்தது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் இருந்து விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து விண்வெளி நோக்கி பயணத்தை தொடங்கியது. விண்கலத்தின் முதல்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட எஞ்சின் பூமிக்கு திரும்பியது. மதியம் 12.01 மணிக்கு புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடையும். நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்கலம் சென்றடையும். இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த 4 வீரர்களும் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்யவுள்ளனர்
-
Jun 25, 2025 12:39 IST
விண்வெளியை நோக்கி பயணிக்கும் சுபான்ஷு சுக்லா.
விண்வெளியை நோக்கி பயணிக்கும் சுபான்ஷு சுக்லா 36 மணி நேரம் பயணித்து நாளை (ஜூன் 26) மாலை 4.30 மணிக்கு விண்வெளி நிலையத்தை சென்றடைகிறார் சுபான்ஷு சுக்லா. நாசாவில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டனர்; பல்வேறு காரணங்களால் மொத்தம் 6 முறை திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று புறப்பட்டனர்
-
Jun 25, 2025 12:15 IST
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த தரைக்காற்று வீசக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
-
Jun 25, 2025 12:14 IST
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு
வயநாட்டில் பெய்த கனமழையால் சுரல்மலாவின் முண்டகை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேப்பாடி, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வயநாடு பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
-
Jun 25, 2025 11:58 IST
ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், "இந்திய இரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!
இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது…
AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.
ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!" என குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 25, 2025 11:29 IST
மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஆ. ராசாவிற்கு நாவடக்கம் தேவை - நயினார் நாகேந்திரன்
மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஆ. ராசாவிற்கு நாவடக்கம் தேவை என்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மேலும், கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது என்று கூறியுள்ள அவர், அமித்ஷா குறித்து பேச ஆ. ராசாவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Jun 25, 2025 10:49 IST
வி.பி. சிங் புகழை போற்றுவோம் - ஸ்டாலின்
'சமூகநீதிக் காவலர்' வி.பி. சிங் புகழை நாளும் போற்றுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய நிலப்பரப்பில் மண்டிக் கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியை தூக்கிச் சுமந்த விடிவெள்ளி 'சமூகநீதிக் காவலர்' வி.பி. சிங் புகழை நாளும் போற்றுவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Jun 25, 2025 10:45 IST
இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் 2-வது நாளாக ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் இன்று இரண்டாவது நாளாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, அமைப்பு ரீதியாக 40 இடங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்கின்றனர்.
-
Jun 25, 2025 10:40 IST
நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில், அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில், சைபர் கிரைம் நிபுணர்கள் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
-
Jun 25, 2025 10:12 IST
ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்தது - மோடி
ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்தது என்று அவசர நிலையின் 50 ஆண்டுகள் நிறைவு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 25, 2025 09:44 IST
ஆபரணத்தங்கத்தின் விலை குறைவு
தொடர்ந்து 2வது நாளாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.72,560க்கு விற்பனையாகிறது.
-
Jun 25, 2025 09:43 IST
‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை
நாட்டின் கடல் வழி பாதுகாப்பை உறுதி செய்ய 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை இன்று கடலோரப் பகுதிகளில் நடக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த ஒத்திகையை கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், காவல்துறை ஆகிய துறைகள் இணைந்து நடத்துகின்றன.
-
Jun 25, 2025 09:17 IST
இந்து முன்னணிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்
முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார், அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து இந்து முன்னனி வீடியோ வெளியிட்டது கண்டனத்துக்குரியது என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.