/indian-express-tamil/media/media_files/2025/03/25/z4qboOZGdRsgMyO4g9xC.jpg)
Today Latest Live News Update in Tamil 26 June 2025:பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 27, 2025 01:48 IST
நடிகர் கிருஷ்ணாவிற்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல்
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவருக்கும் ஜூலை 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணாவை முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
Jun 26, 2025 22:03 IST
இந்தியா - பாக். போரை நிறுத்தியது நான் தான்: டிரம்ப் மீண்டும் கருத்து
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது தான் தான் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது அவர் இக்கருத்தை தெரிவிக்கும் 18வது முறையாகும்.
“நான் நிறைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை முக்கியமானதாகக் குறிப்பிடலாம்” என்று டிரம்ப் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
-
Jun 26, 2025 21:10 IST
பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் மரணம்
நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவர் பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 95.
-
Jun 26, 2025 20:14 IST
போலந்தில் இருந்து மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி - விஸ்னிவ்ஸ்கி பேச்சு
அடுத்ததாக, விண்வெளி வீரர் எண் 635, ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி பேசுகிறார். அவர் Axiom-4 இல் நியமிக்கப்பட்ட மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஆவார்.
அவர் தளபதி விட்சன் மற்றும் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள பிற குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் தொடங்கினார். ஹூஸ்டனில் அவர்கள் சந்தித்ததையும், இப்போது சர்வதேச விண்வெளி மையத்தில் விண்வெளியில் சந்தித்ததையும் நினைவு கூர்ந்தார்.
ஒரு விஞ்ஞானியாக, அடுத்த 2 வாரங்களுக்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும், தங்கள் நாடுகளுக்கு சிறந்ததைச் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
-
Jun 26, 2025 19:53 IST
'ஒரு சிறப்புரிமை, அற்புதமான பயணம்': சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுபன்ஷு சுக்லா முதல் பேச்சு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா பேசுகையில், 634வது விண்வெளி வீரராக இருப்பது ஒரு சிறப்புரிமை என்று கூறினார். அப்போது அவரது சக விண்வெளி வீரர்கள் சிரிப்பலையில் மூழ்கினர்.
அவர் கூறியது இதோ:
"பூமியை ஒரு உயர்ந்த இடத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது ஒரு சிறப்புரிமை. இது ஒரு அற்புதமான பயணம். இது மிகச் சிறப்பானது. நான் விண்வெளிக்கு வர ஆவலுடன் இருந்தேன். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால் நான் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த நொடியே... இந்த குழு (ஏற்கனவே ISS இல் உள்ள எக்ஸ்பெடிஷன்-73 குழுவை சுட்டிக்காட்டி) என்னை மிகவும் வரவேற்றது. நீங்கள் உங்கள் வீட்டின் கதவுகளை எங்களுக்காகத் திறந்தீர்கள். அது அற்புதமாக இருந்தது. நான் இன்னும் சிறப்பாக உணர்கிறேன். இங்கு வருவதற்கு முன்பு எனக்கு இருந்த எதிர்பார்ப்புகள், காட்சியால் நிச்சயமாக மிஞ்சப்பட்டன - அது ஒரு பெரிய பகுதி - ஆனால் நீங்களும் கூட. எனவே, மிக்க நன்றி.
இது அற்புதமாக இருந்தது. இது வியக்கத்தக்கது, மேலும் அடுத்த 14 நாட்கள் - நீங்கள் சொன்னது போல் - அறிவியலையும் ஆராய்ச்சியையும் மேம்படுத்துவதிலும், ஒன்றாகச் செயல்படுவதிலும் அற்புதமாக இருக்கும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மிக்க நன்றி." என்று கூறினார்.
-
Jun 26, 2025 19:09 IST
சுபான்ஷு சுக்லா டிராகன் விண்கலத்தில் 'ஜாய்' உடன் ஹாப்பி போட்டோஸ்
விண்வெளிக்குச் சென்ற டிராகன் விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா 'ஜாய்' என்ற பெயரிடப்பட்ட மென்மையான அன்னப்பறவை பொம்மையை கையில் வைத்தபடி இன்-ஃப்ளைட் அப்டேட்டை வழங்குகிறார். வியாழக்கிழமை எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், அவரது சக விண்வெளி வீரர்களான அனுபவமிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் (அமெரிக்கா) தளபதியாகவும், போலந்து பொறியாளர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரிய ஆராய்ச்சியாளர் டிபோர் கப்பு ஆகியோரும் உடன் இருந்தனர்.
-
Jun 26, 2025 18:57 IST
கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை – நயினார் நாகேந்திரன்
அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உண்மையான கூட்டணி, வெல்லும் கூட்டணி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
-
Jun 26, 2025 18:33 IST
4 விண்வெளி வீரர்களையும் வரவேற்ற நிலைய குழு
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் சுபான்ஷூ சுக்லா. புதிதாக விண்வெளி நிலையத்திற்குள் சென்ற 4 விண்வெளி வீரர்களையும் ஏற்கெனவே அங்குள்ள விண்வெளி வீரர்கள் வரவேற்பு பானம் கொடுத்து வரவேற்றனர்
-
Jun 26, 2025 18:03 IST
சர்வதேச விண்வெளி மையத்திற்குள் சென்றார் சுபான்ஷூ சுக்லா
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி மையத்திற்குள் சென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்
WATCH | #AxiomMission4 crew - Mission Commander Peggy Whitson (US), Mission pilot #ShubhanshuShukla (India) and Mission Specialists Tibor Kapu (Hungary) and Slawosz Uznanski-Wisniewski (Poland) enters the International Space Station (ISS).
— ANI (@ANI) June 26, 2025
(Video: NASA via Reuters) pic.twitter.com/rIEHgdu277 -
Jun 26, 2025 17:43 IST
நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
சுபமுகூர்த்த தினத்தை கணக்கில்கொண்டு நாளை (ஜூன் 27) அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்
-
Jun 26, 2025 17:26 IST
சர்வதேச விண்வெளி மையத்தோடு இணைந்த `க்ரூ டிராகன்’; நேரலையில் பார்த்து மகிழ்ந்த சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர்
`க்ரூ டிராகன்’ சர்வதேச விண்வெளி மையத்தோடு இணைந்தது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் அந்த காட்சியை நேரலையில் உணர்ச்சி பொங்க பார்த்து மகிழ்ந்தனர்
-
Jun 26, 2025 17:13 IST
ஆடியோ சிக்கல்களை சரிசெய்ய முயற்சிக்கும் விண்வெளி வீரர்கள்
முந்தைய பிக் லூப் ஆடியோ தொடர்பு சிக்கல்களை சரிசெய்ய முயற்சிப்பதாக விண்வெளி வீரர்கள் தெரிவித்தனர்
இதன் பொருள் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அக்ஷ்யம் குழுவினர் சுமார் 5 நிமிடங்களுக்கு தொடர்பை இழக்க நேரிடும்
மேலும் சோதனைகள் தேவைப்படலாம், அவர்கள் மீண்டும் சரிபார்ப்பார்கள்.
-
Jun 26, 2025 16:30 IST
சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின்
Video: Sun News
#WATCH | வேலூர், திருப்பத்தூர் மாவட்ட கள ஆய்வு முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு #SunNews | #CMMKStalin | #DMK | #Chennai pic.twitter.com/61i5i72O7O
— Sun News (@sunnewstamil) June 26, 2025 -
Jun 26, 2025 16:22 IST
கர்நாடகாவில் 15 வகையான மருந்துகளுக்கு தடை
பாராசிட்டமால் 650, MITQ Q7 சிரப், PANTOCOAT-DAR உள்ளிட்ட மருந்துகள், வைட்டமின் B6 & வைட்டமின் D3 மாத்திரை, சோடியம் குளோரைடு ஊசி IP 0.9% w/v, இரும்பு சுக்ரோஸ் ஊசி USP 100ML, கலவை சோடியம் லாக்டேட் ஊசி I.P. RL -க்கு உள்ளிட்ட 15 வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதித்தது கர்நாடக அரசு
பொதுமக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் கர்நாடக அரசு நடவடிக்கை -
Jun 26, 2025 16:19 IST
வெற்றிகரமாக இணைந்தது Dragon விண்கலம்
விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது Dragon விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியரானார் சுபான்ஷு சுக்லா!
-
Jun 26, 2025 16:17 IST
ரூ.25,000 லஞ்சமாக வாங்கிய பில் கலெக்டர் கைது
சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில், வீட்டு வரி போடுவதற்கு ரூ.25,000 லஞ்சமாக வாங்கிய பில் கலெக்டர் உமாநாத் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது
-
Jun 26, 2025 15:32 IST
இஸ்லாமிய பெண்கள் 'குலா' முறைப்படி நேரடியாகவே விவாகரத்து கோரலாம்
இஸ்லாமிய பெண்கள் 'குலா' முறைப்படி நேரடியாகவே விவாகரத்து கோரலாம். இது தொடர்பான சட்டங்கள், மத வழிகாட்டுதல்களை பரிசீலித்து, அதன்பின் இஸ்லாமிய பெண்கள் 'குலா' வழியாக விவாகரத்து கோரலாம். மத நம்பிக்கையின் பெயரில் பெண்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது. குலா என்பது இஸ்லாமிய முறைப்படி பெண்களே விவாகரத்தை தொடங்கும் முறை
- தெலங்கானா உயர்நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு
-
Jun 26, 2025 15:26 IST
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள்
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்கப்பட்டதாக அறிவிப்பு
-
Jun 26, 2025 14:31 IST
போதைப்பொருள் விவகாரம் - பிரதீப் கூட்டாளியிடம் விசாரணை
போதைப்பொருள் விற்பனையாளரான கெவினிடம் நடிகர் கிருஷ்ணா போதைப்பொருளை வாங்கினாரா?, வாட்சப் உரையாடல்கள், செல்போன் அழைப்புகளை வைத்து கெவின் மற்றும் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடந்து வருகிறது. கெவின் மூலம் கிருஷ்ணாவின் மேலாளருடைய ஓட்டுநர் செல்போன் மூலமாக போதைப்பொருளை வாங்கியதாக தகவல் தெரிய வந்துள்ளது.
-
Jun 26, 2025 14:26 IST
பாக்.-ற்கு உளவு பார்த்ததாக இந்திய கடற்படை ஊழியர் கைது
டெல்லி கடற்படை தலைமையகத்தில் உயர் பிரிவு எழுத்தராக பணியாற்றும் விஷால் யாதவை ராஜஸ்தான் காவல்துறையின் புலனாய்வு பிரிவு கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். முக்கியமான கடற்படை, பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையும் அடங்கும்.
அரியானாவின் ரேவாரியைச் சேர்ந்த விஷால் யாதவ் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரியா ஷர்மா என்ற பெண்ணுக்கு தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. விஷால் யாதவுக்கு கிரிப்டோகரன்சி மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது.
-
Jun 26, 2025 13:57 IST
மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - வானிலை மையம் தகவல்
வடமேற்கு வங்கக்கடல் மற்றும அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று (ஜூன் 25) கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வயநாடு, பாலக்காடு, மலப்புரம், இடுக்கி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம், திருவனந்தபுரம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
-
Jun 26, 2025 13:29 IST
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் கிருஷ்ணா கைது
போதைப் பொருள் வழக்கு தொடர்பான விசாரணை நடந்த நிலையில், நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கிருஷ்ணாவை காவல் துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jun 26, 2025 12:54 IST
ஒரே விலையில் ஆட்டிறைச்சி – புதிய இணையதளம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும் என தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார். தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்படும். தினமும் முட்டை விலை, பிராய்லர் கோழி விலை நிர்ணயிக்கப்படுவது போல் ஆடு, மாடு, கோழி விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறினார்.
-
Jun 26, 2025 12:54 IST
கர்நாடகாவில் Pomol-650 (பாரசிட்டமால்) மாத்திரைக்கு தடை
Pomol-650 (பாரசிட்டமால்) உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை விதித்தது. தடை செய்யப்பட்ட மருந்துகளை சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது. ஆய்வுகளின் முடிவில் ஆபத்தான மருந்துகள் என 14 மருந்துகளை வகைப்படுத்தியுள்ளது என கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
-
Jun 26, 2025 12:37 IST
பயணிக்கு உடல்நலக்குறைவு – விமானம் அவசர தரையிறக்கம்
பயணிக்கு உடல்நலக்குறைவால் மும்பை – சென்னை இண்டிகோ விமானம் ஐதராபாத்தில் தரையிறக்கப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பயணியை மருத்துவமனையில் சேர்த்த பின்னர், ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது.
-
Jun 26, 2025 12:22 IST
ஷாங்காய் கூட்டறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் கூட்டறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். SCO கூட்டறிக்கையில் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படாததாலும், பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவதாக கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டதையும் ஏற்க ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
Jun 26, 2025 11:17 IST
ஜெகன்மூர்த்தியின் ஜாமின் மனு ஒத்திவைப்பு
சிறுவன் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி தொடர்ந்த ஜாமின் மனு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து, வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jun 26, 2025 11:14 IST
இறுதி மூச்சு இருக்கும் வரை நானே தலைவர் - ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கருணாநிதி பாணியில், எனது இறுதி மூச்சு இருக்கும் வரை பா.ம.க-வின் தலைவராக நான் தான் செயல்படுவேன். ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல் தலைவராக செயல்படவேண்டும். கருணாநிதி தலைவராக இருந்த போது, ஸ்டாலின் தரப்பில் இருந்து ஒரு முணுமுணுப்பு கூட வரவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Jun 26, 2025 10:27 IST
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம், வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் சட்ட வல்லுநர்கள், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்டோரின் கருத்துகள் கேட்கப்பட இருக்கின்றன.
-
Jun 26, 2025 10:22 IST
‘சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன' - சீனாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
சீனாவில் நடைபெறும் எஸ்.சி.ஓ மாநாட்டில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். இதில் பேசிய அவர், 'சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன' என்று தெரிவித்துள்ளார்.
-
Jun 26, 2025 10:09 IST
நாளை முதல் 2 நாட்களுக்கு கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம்
சென்னையில், நாளை முதல் 2 நாட்களுக்கு கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சாகித்திய அகாடமி, தமிழ்த் துறை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகின்றன.
-
Jun 26, 2025 09:55 IST
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மலை பகுதிகள், கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
-
Jun 26, 2025 09:16 IST
எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குபதிவு
இளைஞரை கடத்திய புகாரில் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி மீது சிபிசிஐடி வழக்குபதிவு செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக பூவை ஜெகன்மூர்த்தி கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து 2 பேர் மீதும் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
-
Jun 26, 2025 09:14 IST
"நீதியின் முன் நிறுத்த வேண்டும்"
"எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்" என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
Jun 26, 2025 08:27 IST
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் கன மழையை தொடர்ந்து இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jun 26, 2025 08:24 IST
அவகாசம் நீட்டிப்பு
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 29 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மருத்துவ படிப்புக்கான விண்ணப்பப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
Jun 26, 2025 08:18 IST
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவி நயினார் அணை 132 அடி கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
Jun 26, 2025 08:17 IST
அடையாறு பிரதான சாலையில் விபத்து நடந்தது எப்படி? விவரிக்கும் லாரி ஓட்டுநர்
கழிவுநீர் லாரி மோதியதில், அவ்வழியாக சென்ற சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கீழே கவிழ்ந்து விபத்து. இதனால் சாலையில் எண்ணெய் கசிந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல ஏதுவாக மணல் பரப்பப்பட்டுள்ளது.
-
Jun 26, 2025 08:00 IST
ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் வழக்கு-இன்று விசாரணை
சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ஜெகன்மூர்த்தியின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதி வேல்முருகன் விசாரித்த நிலையில் உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜெயச்சந்திரன் முன்பு மாற்றம்.
-
Jun 26, 2025 07:43 IST
சிறுமியைக் கொன்ற சிறுத்தை சிக்கியது
கோவை வால்பாறை அருகே 6 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிப்பட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த வாரம் 20 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை கவ்விச் சென்று கொன்றது. வனத்துறையினர் கூண்டு வைத்த நிலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை அதில் பிடிபட்டது.
-
Jun 26, 2025 07:41 IST
நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை
திருவள்ளூர் பேரம்பாக்கம் அருகே இருளஞ்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் முகேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். நாட்டு வெடிகுண்டுகள் வீசியதில் முகேஷ் உயிரிழந்த நிலையில் ஜாவித், தீபன் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாற். இரு நாட்களுக்கு முன் ஆகாஷ் என்பவர் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jun 26, 2025 07:38 IST
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
Jun 26, 2025 07:34 IST
போதைப் பொருள் விவகாரத்தில் விடிய விடிய விசாரணை
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் 16 மணி நேரமாக விசாரணை நடந்து வருகிறது. சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதான நிலையில் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
-
Jun 26, 2025 07:32 IST
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 24,000 கன அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், பரிச இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 60,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
Jun 26, 2025 07:30 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.