/indian-express-tamil/media/media_files/jn5GoI8gKRKwtRYZi8Oj.jpg)
தமிழ்நாட்டில் ஜூன் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதிகனமழை பெய்யும் என இந்திய வாலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு என்றும், இன்றைய தினம் கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் கன முதல் மிக கனழமைக்கு வாய்ப்பு என்றும் ம் வரும் 23, 24, 25 ஆகிய தேதியில் அதிக் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாகா ஆகிய தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தயாராகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.