Advertisment

திருநெல்வேலி உள்பட 8 மாவட்டங்களுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷன், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடியை சூழ்ந்து வெள்ளம் காணப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Kanyakumari Nellai Tenkasi and Tuticorin districts Heavy rain video Tamil News

திருநெல்வேலி உள்பட 8 மாவட்டங்களுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

tirunelveli | திருநெல்வேலி உள்பட 8 மாவட்டங்களுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளி்டட மாவட்டங்களில் டிச.16ஆம் தேதியில் இருந்து மழை பெய்துவருகிறது.

திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷன், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு திருநல்வேலி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் துத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நேற்று பெய்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் பெருமளவு மழை நீர் தேங்கி காணப்பட்டது. செட்டிக்குளத்திலும் சாலைகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. சில இடங்களில் ஆறுபோல் ஓடியது.

மறுபுறம், வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடியை சூழ்ந்து வெள்ளம் காணப்படுகிறது. தூத்துக்குடி புறவழிச்சாலை அருகே மழைநீரில் லாரிகள் மூழ்கி காணப்படுகின்றன.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment