மழை நிலவரம் :
நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பலமான காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ முதல் 55-60 கி.மீ வேகத்தில் வீசும். தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில், தென்மேற்கு மற்றும் மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ முதல் 55-60 கி.மீ வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.