லேப்டாப் சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் மரணம்; ராஜபாளையத்தில் சோகம்

ராஜபாளையத்தில் சார்ஜ் போட்டப்படி லேப்டாப் பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; சென்னையைத் தொடர்ந்து விருதுநகரில் சோக சம்பவம்

ராஜபாளையத்தில் சார்ஜ் போட்டப்படி லேப்டாப் பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; சென்னையைத் தொடர்ந்து விருதுநகரில் சோக சம்பவம்

author-image
WebDesk
New Update
dead

ராஜபாளையத்தில் சார்ஜ் போட்டப்படி லேப்டாப் பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் லேப்டாப் சார்ஜ் செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர், கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்தி குமார் (50). இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் செந்திமயில் (22) பி.எஸ்.சி பட்டதாரி. செந்திமயிலுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ராஜாராம் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். 

இந்தநிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் செந்திமயில், வீட்டில் லேப்டாப் சார்ஜ் செய்தபோது எதிர்பாரா விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செந்திமயில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சேத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர், சென்னையில் லேப்டாப்க்கு சார்ஜ் போட முயன்றபோது மின்சாரம் தாக்கி கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Virudhunagar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: