/indian-express-tamil/media/media_files/BN8FrLVpD4Q36W7V00xv.jpg)
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே அவரது நெருங்கி தோழியான வி.கே.சசிகலா புதிய பங்களா வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் ஜனவரியில் புதுமனை புகுவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று (பிப்.24) புதிய பங்களாவுக்கு சசிகலா குடியேறினார்.
இந்த பங்களாவுக்கு 'ஜெயலிலதா இல்லம்' என சசிகலா பெயரிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவின் புதிய பங்களா வீட்டிற்கு நேரில் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோயில் போல் உள்ளது. இந்த வீடு அவர்களுக்கு பெயர், புகழ், சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அரசியல் பேச விரும்பவில்லை” எனக் கூறி புறப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.