/tamil-ie/media/media_files/uploads/2019/11/rajiv-murugan.jpg)
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக சிறைத்துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதனை கண்டித்து கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க கோரி அவருடைய உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகனுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முருகனுக்கு சிறையில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என சிறைத்துறை தரப்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முருகனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.