Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தமிழ்நாடு

முருகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்; அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக சிறைத்துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by WebDesk

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக சிறைத்துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
07 Nov 2019 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 07 Nov 2019 17:13 IST

Follow Us

New Update
முருகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்; அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக சிறைத்துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதனை கண்டித்து கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க கோரி அவருடைய உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகனுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

மேலும், முருகனுக்கு சிறையில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என சிறைத்துறை தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முருகனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Murugan Chennai High Court Madras High Court Rajiv Gandhi Vellore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!