Advertisment

ராமர் கோயில் விழா; தனியார் கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்யலாம்: ஐகோர்ட்

ராமர் கோயில் திறப்பை தனியார் கோயில்களில் நேரலை செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை- சென்னை உயர் நீதிமன்றம்

author-image
WebDesk
New Update
Madras High Court judgement on Murasoli Trust land case NCSC to inquire Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை தனியார் கோயில்களில் நேரலை செய்யவோ, பூஜைகள்  செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை. ஒரு வேளை கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம். இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் பூஜை செய்ய கோயில் செயல் அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Advertisment

அயோத்தியில், ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினரின் உத்தரவை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் அதன் தலைவர் கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனுவில், அயோத்தி செல்ல இயலாத பக்தர்களுக்காக பஜனை, அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில் காவல்துறை அனுமதி பெறவில்லை எனக் கூறி, நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக அனுமதி கோரி விண்ணப்பித்த போது, 7 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கவில்லை என்றும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனவும் கூறி அனுமதி மறுத்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

தனியார் மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் எந்த மதத்தை பற்றியும் விவாதிக்கவில்லை என்றும், மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதி என்பதால் இந்த நிகழ்ச்சியை தடுக்க கூடாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று காலை (ஜன.22) அவசர வழக்காக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். 

அப்போது மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ அல்லது பூஜைகள் மேற்கொள்ளவோ போலீசார் அனுமதி தேவையில்லை எனக் கூறினார் . 

மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். 

ஒருவேளை கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Ram Temple
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment