'கைது என்பது பழிவாங்கும் செயல்: பத்ரி சேஷாத்ரியை விடுவியுங்கள்': மு.க. ஸ்டாலினுக்கு ராமசந்திர குஹா கடிதம்

“பத்ரி சேஷாத்ரியை விடுதலை செய்யுங்கள்; கைது நடவடிக்கை என்பது பழிவாங்கும் செயலாகவே உள்ளது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ராமச்சந்திர குஹா கடிதம் எழுதியுள்ளார்.

“பத்ரி சேஷாத்ரியை விடுதலை செய்யுங்கள்; கைது நடவடிக்கை என்பது பழிவாங்கும் செயலாகவே உள்ளது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ராமச்சந்திர குஹா கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Badri Seshatri Arrest

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ராமச்சந்திர குஹா கடிதம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மின்னஞ்சல் வாயிலாக ராமச்சந்திர குஹா கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தமிழக அரசால் கைது செய்யப்பட்ட பத்ரி சேஷாத்ரியை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

கடிதத்தில், “சமீபத்தில் எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டது குறித்து இதனை எழுதுகிறேன்.
சேஷாத்ரியின் அரசியல் கருத்துக்களை நான் ஆதரிக்கவில்லை. இருப்பினும் அவரது கைது இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு முரணானது.

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்ததாக சேஷாத்ரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனநாயகம் செயல்படும் நாட்டில் இத்தகைய விமர்சனங்கள் கைதுக்கான அடிப்படையாக இருக்க முடியாது. எஃப்ஐஆர் அடிப்படையில் முன்கூட்டிய கைது என்பது அரசியல் பழிவாங்கும் செயலாகவே தோன்றுகிறது. அவரை விடுவிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: