பா.ம.க வன்னியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியில் சித்திரை முழுநிலவு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி, திலகபாமா, சவுமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய ராமதாஸ், " 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சித்திரை முழு நிலா மாநாட்டில் 10.5% இட ஒதுக்கீட்டிற்காக விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை அறிவிக்கப்போவதாக தெரிவித்தார்.
திமுக அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், ஆள் பலம், பண பலம் மற்றும் ஊடக பலம் இருந்தும் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
காக்கா பிடித்தால் தேர்தலில் சீட் கிடைக்காது என்று திட்டவட்டமாக கூறிய அவர், எங்களுடைய கணக்கை பார்க்காதீர்கள்; சரியாக செயல்படாவிட்டால், எம்எல்ஏவாக இருந்தாலும் கடலில் தூக்கி எறிந்துவிடுவேன் என்று எச்சரித்தார்.
மேலும், என்னை கிழவன் என்று ஏமாற்றி விடலாம் என்று எண்ணாதீர்கள்; என் கைப்பிடித்து பாருங்கள் எவ்வளவு பலமாக இருக்கிறேன் என்று, பாமக ஆட்சியில் அமர வைக்க பல இளைஞர்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார்.