/indian-express-tamil/media/media_files/2025/08/01/pmk-general-body-meeting-ramadoss-anbumani-announce-dates-places-tamil-news-2025-08-01-21-14-18.jpg)
கடந்த மாதம் 17-ந்தேதி பட்டானூரில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூடியது. அந்த கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பூதாகரமாக மாறிவிட்டது. ராமதாஸ் நடத்திய கூட்டங்களில் பங்கேற்காமல் அன்புமணி புறக்கணித்தார். பின்னர், ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திலும், அன்புமணி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்திலும் நிர்வாகிகளை சந்தித்து வந்தனர்.
இதனிடையே, கடந்த மாதம் 17-ந்தேதி பட்டானூரில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூடியது. அந்த கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால், தன் மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் முதற்கட்டமாக அன்புமணியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதன்பிறகும் அவர் பணியாவிட்டால் பதவி பறிப்பு, கட்சியில் இருந்து நீக்கம் போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடரும் என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள். இதற்கிடையில், பா.ம.க. மாநில சமூக ஊடகப் பேரவை கூட்டம் நேற்று காலை டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.