/indian-express-tamil/media/media_files/2025/09/03/ramanathapuram-collector-simranjeet-singh-kahlon-on-immanuvel-sekaran-guru-poojai-date-2025-tamil-news-2025-09-03-16-03-14.jpg)
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்த வருவோர் பின்பற்ற வேண்டிய 23 நிபந்தனைகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் வரும் 11ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அஞ்சலி செலுத்த வருவோர் பின்பற்ற வேண்டிய 23 நிபந்தனைகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
அஞ்சலி செலுத்த வருவோர் தங்களது சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். பிற மாவட்டங்களில் இருந்து வருவோர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனுமதி பெற்றே வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடம் மூலமாகவே நினைவிடத்திற்கு வரவும் செல்லவும் வேண்டும்.
வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்வது, ஆயுதங்களை கொண்டு வருவது, பட்டாசு வெடிப்பது, ஒலிபெருக்கி பயன்படுத்துவது அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்களில் ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் கொண்ட பேனர்கள், முழக்கங்கள் வைக்கக் கூடாது. பேருந்துகளில் பயணிகள் படிக்கட்டிலும் மேற்கூரையிலும் பயணிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் வரும்போது, அவர்களுடன் அதிகபட்சம் மூன்று சொந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.