Advertisment

செக் மோசடி வழக்கு: பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் - ராமநாதபுரம் கோர்ட் அதிரடி

ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக இறால் பண்ணை அதிபரை ஏமாற்றிய செக் மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
 Ramanathapuram court issues arrest warrant to actor Powerstar Srinivasan in Cheating case Tamil News

ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, 14 லட்ச ரூபாய் அட்வான்ஸ் தொகை பெற்று, திருப்பி கொடுக்கவில்லை என நடிகர் பவர் ஸ்டார் மீது புகார் அளிக்கப்பட்டது.

Actor-powerstar-seenivasan: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவர் உப்பளம் மற்றும் இறால் பண்ணையை நடத்தி வருகிறார். அவரது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.  

Advertisment

இதற்கான ஆவணங்களை தயார் செய்ய ரூ.14 லட்சம் தர வேண்டும் என பவர் ஸ்டார் சீனிவாசன் கேட்டுள்ளார். இதனையடுத்து, இறால் பண்ணை அதிபரான முனியசாமி அவர் கேட்ட பணத்தை  2019 ஆம் ஆண்டு வழங்கியிருக்கிறார்.

ஆனால், முனியசாமி கேட்ட கடனை பவர் ஸ்டார் சீனிவாசன் வாங்கித் தரவில்லை. அத்துடன் அவர் கொடுத்த பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை. ரூ.14 லட்சத்திற்கு பவர்ஸ்டார் சீனிவாசன் கொடுத்த செக்  வங்கியில் பணம் இல்லை என்று திரும்ப வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நிலவேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது செக் மோசடி வழக்கில் ஆஜராகாமல் இருந்த குற்றத்திற்காகநடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். 

அக்குபஞ்சர் மருத்துவரான சீனிவாசன் 2010 ஆம் ஆண்டு வெளியான 'நீதானா அவன்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் சொந்தமாக தயாரித்த லத்திகா படம் மருத்துவர் சீனிவாசனை, பவர் ஸ்டார் சீனிவாசனாக மாற்றியது. இதன்பின்னர் அவர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில், ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக இறால் பண்ணை அதிபரை ஏமாற்றிய செக் மோசடி வழக்கில் தற்போது அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor Powerstar Seenivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment